வியாழன், 8 செப்டம்பர், 2011

1.செல்லத்தம்பி சிவகுமார் (செல்லா)
-------------------------------------------------
புங்குடுதீவு
ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிவகுமார் ஸ்ரீ கணேச மகா வித்தியாலய த்தில் கல்வி கற்றார்.சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக புலம்பெயர்ந்து தற்போது சுவிசில் வசித்து  வரும் சிவகுமார் தனது முறைப்பெண்ணான நகேஸ்வரியை மணந்துள்ளார்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்தே மத்திய குழு உறுப்பினாராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்.ஒன்றியத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் பாரிய பணியை செய்து செவ்வனே முடித்து வைத்த பெருமைக்குரியவர் .ஒன்றியத்தின் நிதியியலை சிறப்பாக கையாண்டவர்.அத்தோடு சுவிசில்  நீண்ட காலமாக தாயக விடுதலை பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார்.ஆரம்பத்தில் சுவிஸ் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயல்பாடுகளிலும் முழுமனதுடன் செயலாற்றியவர் சிவகுமார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக