வெள்ளி, 27 ஏப்ரல், 2012

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

suresh

ontriya sinnam
sellathurai sathaananthan 
திருச் செல்வம்  .முரளி 
-------------------------------
சுவிட்சர்லாந்தில் ஆன்மீக துறையில் வரலாறு படைத்த ஒரு இளைஞன் என்றால் முரளிக்கே அந்த பெருமை கிடைக்கும் . மிக இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி சைவ  சமய விதிகள் ,வழிபாட்டு  முறைகள் என்பவற்றை ஐயம் திரிபறக் கற்று தேர்ச்சி பெற்ற இவர் சமஸ்கிருதத்தையும் படித்து சைவ சமய கிரியைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார் .வழிதோன்றலாக வரும் வேதியருக்கு ஒப்பாக அத்தனைசமயக் கிரியைகளையும் செய்யும் வல்லமை பெற்ற இவர் சிறிய ஆலயமொன்றை தனது இல்லத்தில் அமைத்து வழிபட்டு வந்தார் நாளடைவில் இன்னும் சில இளைஞர்களை திரட்டி சைவநேறிக்கூடம் என்ற பெயரில் சைவ சமயத்தை வளர்க்க பாதுகாக்க என புறப்பட்டார் .இதன் விளைவாக பெர்ன் மாநகரில் ஞான லிங்கேஸ்வரர் ஆலயத்தை அமைத்து சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலுமே வழிபாடு செய்து புரட்சி செய்து வருகிறார் அத்தோடு வேற்று இனத்து மக்கöளுக்கும் எமது சமய தொன்மைகளை வில்குமுகமாக பல திட்டங்கöலை வகுத்து பிரசாரப் படுத்தி வரும் அரிய சேவையை திறம்பட நடத்தி வருகிறார் .எளிமை .புனிதம்.நேர்மை தூய்மை ,சமயப்பற்று மொழிப்பற்று அடக்கம் இயல்பாக பழகும் தன்மை என்பவற்றை தனது கொள்கைகளாக கொண்டு எமது ilaiya தலைமுறைக்கு வழிகாடியாக விளங்குகிறார் அத்தோடு இளம் சமுதாயத்தில் சமய எழுச்சியை ஊட்டி தன்னை போன்று மேலும் பல இளைஞர்களை சமய முறைமைகளை கற்று டேஹ்ற உதவுகிறார் ஒரு பரம்பரை பிராமணனுக்கு நிகராக இவரது செயலும் திறமையும் மிளிர்ந்து நிற்கின்றன . இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வாடா தென் இந்தியாவில் உள்ள அத்தனை தொன்மை பழமை மிக்க ஆலயங்களையும் தர்சிப்பதொடு மேலும் மேலும் ஆன்மீகத்தை கற்று வரும் இவர் சித்தர்கள் மேல் கொண்ட ஆர்வத்தினால் அவர்கள் சம்பந்தமான செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கு பற்றுகிறார் . ஆன்மிகம் மட்டும் அன்றி நாட்டுப்பற்று நாடகம் நாட்டுக்கூத்து என இவரது பணி நீளுகின்றது 
சுவிசில் வாழும் ஏனையோரில் முக்கியமானவர்கள் -துறை 
-----------------------------------------------------------------------------------
உதயகுமார் -இசை 
ஜெயந்தன் -இசை 
சாமி சுரேஷ்- கவிதை 
க.சேனாதிராசா -விடுதலை பங்களிப்பு 
திருமதி ஞானச்சந்திரன் -கலை ,நாடகம் 
தி.முரளி   ஆன்மிகம் .கலை .நாடகம் 
வி.பகீரதன் -புங்குடுதீவு ஒன்றியம் 
நா.ஜெயகுமார் -ஆன்மிகம் 
சு.சண்முகநாதன் -சமூக சேவை 
எ,திகிலஅழகன் .சமூக சேவை 
சோ.கைலைவாசன்-விடுதலை பங்களிப்பு 
செ.சத்தியமூர்த்தி .விடுதளைபங்களிப்பு 
திருமதி ச.கௌசலா ஆன்மீகம் 
செல்வி லட்சுமணன் -அரசியல் சமூக சேவை 
கி-சௌந்தராசான் வர்த்தகம் 
இ.பாலகுகன் வர்த்தகம் 
இ.ஜெகதீஸ்வரன் வத்தகம் சமூக சேவை 
நகுலேஸ்வரன் -ஒன்றியம் 
க.சிவகுமார் ஒன்றியம் வர்த்தகம் 
க.பாபு வர்த்தகம் 
அ.கைலாசநாதன் ஆன்மிகம் 
ஆ.கைலாயநாதன் வர்த்தகம் 
விகிநீச்வரன் வர்த்தகம் 
ந.குணராசா வர்த்தகம் 
க.ஸ்ரிச்கந்தரசா கணணி
இ.ஸ்ரீஸ்கந்தராசா  வர்த்தகம் 
கமல் வர்த்தகம் 
வி.பாஸ்கரன் வர்த்தகம் 
சிவநேசன் வர்த்தகம் 
க.தயாளன் ஆன்மிகம் 
கிருபைதாசன் ஒளியியல்,வர்த்தகம் 
தர்சிகா கலை ஊடகம் 
திருமதி கஜநிதி சதானந்தன்  கலை 
த.தயாநிதி காந்தன்  கலை 
திருமதி ட.நிமலன் ஆன்மிகம் 
தனபலசுப்ரமனியம் ஆன்மிகம் 
செ.சந்திரபாலன் வர்த்தகம் 
na.சிவதாஸ் ஒளியியல் வர்த்தகம் 
த கை லைமலைனாதன் சமூகசேவை  ஆன்மிகம் 
த.சிவலிங்கம் விடுதலை பங்களிப்பு சமூகசேவை 
ப.தயானந்தன் ஆன்மிகம் 


அன்பு ரவி இதனையும் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் 


vanathi thesingurajah

புதன், 11 ஏப்ரல், 2012

ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )


ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )
-----------------------------------------
புங்குடுதீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிவலைப்பிட்டி தம்பர் கடை சந்தியடி ,புளியடி சாந்தி,நுணுக் கல் ,தொழிலாளர் புரம் ,மாநாவெள்ளை,         போன்ற பிரிவுகளை ஒட்டு மொத்தமாக சின்ன இருபிட்டி என்று அழைப்பது வழக்கம் .இந்த பிராந்தியத்தின் சிற்பி அல்லது வழிகாட்டி என்றால் மக்களின் கை அம்மான் என்று செல்லமாக அழைக்கப் படும் சிவலிங்கத்தையே சுட்டி நிற்கும் .இங்கேயே பிறந்து சிறுவயது முதலே சமுக சேவை யே தனது முழுமூச்சாக கொண்டு புங்குடுதீவு மண்ணின் மேற்கு பக்கத்தை முன்னேற செய்த ஒரு ஒளிவிளக்கு இவர்.01 . 04 . 1948 . இல் பிறந்த சிவலிங்கம் சிவலைபிட்டி சன சமூக நிலையம் ,காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலயம் .என்பவற்றில் செய்யாத பணிகளே இல்லை எனலாம் . சிவலைபிட்டி சனசம்மோக நிலையத்தின் ஆரமப்காலம் தொட்டு அதன் எல்லா வகை நிர்வாக பொறுப்பிலும் இருந்து சிறப்பித்தவர் .அத்தோடு தனக்கு பின்னால் வழிநடத்தவென ஏராளமான இளைஞர்களை பண்படுத்தி மெருகேற்றியவர் .அதனாலோ என்னவோ அம்மானின் விரல் அசைவை கண்டு வீறு கொண்டெழுந்து ஊருக்கு சேவை செய்ய வருடம் தோறும் ஏராளமான வாலிப உள்ளங்கள் போட்டி போட்டு முன்வந்தன.சிவலைப்ட்டி சனசமூக நிலையம் நடத்துகின்ற விளையாட்டு போட்டிகள், நாடக   விழாக்கள் ,சமூகத்  தொண்டுகள் எல்லாவற்றிலும் இவர் முன்னின்று வழி நடத்தினர் .பின்னாளில் இவர் வழிகாட்ட இளம் சமுதாயத்திடம் பல பொறுப்புகளை விட்டு கொடுத்து ஆலோசகராக ஓங்கி நின்றார் .ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டிகள் முடிய இரவு நடைபெறும் பரிசளிப்பு விழாவில் இடம்பெறும் ஏராளமான நாடகங்களை எழுஹ்தி நெறிப்படுத்தி நடித்தும் உள்ளார் .இவர் நடித்த பெண் வேடங்கள் சிறப்பான முத்திரை பதித்தவை .கோவலன் கண்ணகி,வஞ்சிக்கபட்டவள்,பண்டாரவன்னியன் போன்றவை அவற்றில் பிரபலமனவையாகும் .காளி கோவில் நிர்வாகத்திலும் பலம்ட்டதிலும் அலங்கரித்து அந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு துணைபோனவர் .சிவலைபிட்டி ச. ச.நிலையத்தின் பணியான  இந்த ஆலய திருவிழா கால அன்னதான சேவை பொறுப்பை திறம்பட செய்து வந்தார் .மது ஒழிப்புக் கழகம் ,இணக்க சபை போன்ற அமைப்புகளும் இவரை உள்வாங்கி சிறப்பு பெற்றன.,தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலை கூட்டணி என்பவற்றின் முழுமூச்சான அரசியல் பணிக்கு தன்னை இணைத்து கொண்ட இவர் பின்னாளில் தாயக விடுதலைக்கான பங்களிப்பையும் செய்து வந்தார் .இதனை கண்ணுற்ற மாற்றுகருத்து பச்சோந்திகள் .22 .11 .1988  இல் .அநியாயமாக  இவரது உயிரை இளம் வயதிலேயே பலிகொண்டு விட்டனர்   .ஆனாலும் சிவலைபிட்டி சனசமூக நிலைய சிற்பி சிவலிங்கம் என்றே இன்றும் இந்த மண்ணின் மைந்தர்கள் சொல்லி கொண்டே இருக்கிறார்கள் .இருப்பார்கள் .