புதன், 5 அக்டோபர், 2011

மானா வெள்ளை ,
வல்லன் ,சந்தையடி நுணுக்கள் குறிகட்டுவான் போன்ற இடங்களில் பந்தாடினார்.மேட்குரிபிட்ட கழகங்கள் எல்லாமே சில காலங்களில் தாச்சி என்னும் கிளித்தட்டு விளையாட்டையும் விளையாடி வருவார்கள் .மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் அவ்வப்போது கிரிக்கெட்டும் விளையாடி  வந்திருகிறார்கள் , எமது ஊரில் பல சுதேச விளையாட்டுக்களும் மக்கள் விளையாடி வந்துள்ளனர் .கிட்டி அடித்தல் ,தாச்சி,மாபிள் அடித்தல் ,போன்றவைஅவை . எமது ஊரில் நிறைய குளங்கள் ,கடற்கரைகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள்  நீச்சலில் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர் . இனி தனிப்பட்ட ரீதியில் நிறைய வீரர்கள் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளனர் . முக்கியமாக சி.தனபாலசுந்தரம்(ஒட்ட்டம் -வடமாகான  முதல் இடம்--அகில இலங்கை இரண்டாம் இடம் ),சதானந்தன் (குண்டெறிதல் .வடமாகாண முதலாம் இடம் ),இன்னும் வி.லோகநாதன் (சிவா)-குண்டு, கனகராசன் .புங்குட்தீவு 2(ஓட்டம் )   கைலைவாசன் (மரதன்)என்போரும்  இடம் பிடிகிர்ரர்கள் .

madathuveli sanasamooka nilaiyam

மடத்துவெளி

சிவராசா ஸ்ரீ சஜிதா
(நாடு கடந்த தமிழீழ அரசு பாராளுமன்ற உறுப்பினர் )

ஸ்ரீ சஜிதா புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட வீரகத்தி சிவராசாவின் புதல்வியாவார் .சுவிட்சர்லாந்த் செங்காலன் நகரில் வசித்து வரும் இவர் தனது உயர்கல்வியை கற்றுக்கொண்டு தமிழினத்தின் விடுதைலைக்காக ஏராளமான செயலபாடுகளில்  தன்னை அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார் .இளைஞர் அமைப்பில் இணைந்து  எமது இனத்தின் விடிவுக்காக பல திட்டங்களை முறைப்படி ஒழுங்கு படுத்தி செயலாக்கி வருகிறார்.தமிழ் ஜெர்மன் பிரஞ்சு ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரிச்சயமான ஸ்ரீ சஜிதா மிக இளம் வயதிலே சமூக இன மொழி சேவை புரிய வந்திருப்பது பாராட்டுக்குரியதே .இளம் தலை முறைக்கு முன்னுதாரணமாக திகழும் இவர் கடந்த மார்ச் மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சங்க கூட்டத்தில் தமிழரின் விடிவுக்காய் ஆங்கில மொழியில் ஓங்கி ஒலித்த காட்சி எல்லா ஊடகங்களையும் அலங்கரித்தது  நினைவிருக்கும் .

புங்குடுதீவில் விளையாட்டு துறை


புங்குடுதீவில்  விளையாட்டு  துறை 
------------------------------------------------
சகல துறைகளிலும் சிறந்து விளங்கும் புங்குடுதீவு மண் விளையாடு துறையை கூட விட்டு வைக்கவில்லை .அந்த துறை சம்பந்தமாக ஓரளவு சொல்லும் விதமாக இந்த கட்டுரை   அ மைகின்றது  .புங்குட்தீவில் விளையாட்டு என்றதும் முதலி சொல்ல வேண்டிய ஒரு அமைப்பு சிவலைபிட்டி சன சமூக நிலையம் தான் என்பதில் யாரும் குறை சொல்ல மாடார்கள் .வருட பிரப்பென்ர்டஹு இந்த நிலையம் நடத்தும் சைக்கிலோட்ட போட்டி  மற்று மரதன் உட்பட்ட விளையாட்டு போட்டிகளின் நல என்பது எள்ளல புங்குடுதீவு மக்களுக்கும் நினைவுக்கு வரும் .சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த நாளில் இடைவிடாது கோலாகலமாக மாபெரும் விழாவாக இதனை நடத்தி வந்தவர்கள் சிவலைபிட்டி ச.ச.நிலையத்தினர் .   35மைல் சைக்கிலோட்ட போட்டி ௧௦10மைல் மரதனோட்டம் பெண்களுக்கான இதே போட்டிகள் மாட்டு வண்டி சவாரி போட்டி கரப்பந்தாட்டபோட்டிகள் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் என பகல் முழுவதும் நடத்தி இரவில் பரிசளிப்பு விழ நடத்தும் சிறப்பு பாராட்டப் பட வேண்டியது .நுணுக்க ல் வெளியில் இவர்கள் நடத்தும் மாடு வண்டி சவாரி போட்டிக்கென வட மாகாணம் முழுவதும் இருந்து வீரர்கள் வந்திருப்பார்கள் 
இந்த நிலையத்தினர் தினமும் மாலை வேளையில் கரப்பந்தாட்டம் ஆடுவது ஒரு அறிய உடற்ற்பயித்ர்ச்சி  முறையாகும் .இன்னும்சொல்ல போனால்  களம்  இவர்கள் இப்போது நாம் காணும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளை போல சுற்றுப்போட்டிகள் லீக் முறை போட்டிகளை அப்போதே  அங்கெ நடத்தி கட்டிய வரலாறு படைத்திருகிறார்கள்.இவர்களது மைதானத்தில் வேறு கழகங்கள் வந்து விளையாடுவதும் இவர்கள் அங்கெல்லாம் போய் ஆடுவதுமாக இருந்த இந்த முறை இபோதைய மேற்கு நாட்டவ்ரின்முறை தானே .இவர்கள் சென்று ஆடியதும் அழைத்து ஆடியதுமான முக்கிய கழகங்கள் கரம்பொன் ,.பருத்தியடைப்பு, தம்பாட்டி ,வேலணை , வேலனைத்துறை ,உடுப்பிட்டி இமையாணன் ,கரவெட்டி, அச்சுவேலி என்ற வரிசையில் சொல்லி கொண்டே போகலாம் .பல சுற்று போட்டிகளில் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்கள் வீரர்க  ள் வரிசையில் சிவலிங்கம் (அம்மான் ),சின்னராச தங்கராசா ,பிள்ளை நாயகம் , சண்முகலிங்கம், ஸ்ரீதரன் ,தயாபரன் பாலசுப்ரமணியம், அருள் போன்றோரும் சிறந்து விளங்கினார்கள் .சைக்கிலோட்ட போட்டிகளில்ரஞ்சன்  ,மகான் ,கேதான் ,செல்வேந்திர ராசா   போன்ற வீர்களும் பெண்கள் வரிசையில் கௌசல்யா, உதயா போன்ற வீராங்கனைகளும் புகழ் பெற்று விளங்கினார்கள் .
இவர்களை போன்றே தைப்பொங்கல்  நாளில் இருபிட்டி சன சமூக நிலையத்தினர் சைக்கிலோட்ட போட்டிகளை மற்றும் கரப்பந்தாட போட்டிகளை நடத்தி மகிழ்வித்தார்கள் .இவர்களும் சங்கரதாஸ் போன்ற சிறந்த வீரகளை கொண்டு அணி அமைத்து இருந்தார்கள் .அடுத்து மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் புங்குடுதீவில் சிறந்த விளையாட்டுத்துறையை வளர்த்தெடுத்தனர். இவர்களும் மாலை neரத்தில் கரப்பந்தாட்டம் உதபந்தாட்டம் என இரண்டிலும் சிறந்து விளங்கினார்கள் .எண்பதுகளின் ஆரம்பத்தில் தீவுப்பகுதியிலே சிறந்த உதைபந்தாட்டக் கழகமாக தெரிவாகி இருந்தது குறிப்பிடத் தக்கது மேலும் நாசரேத் உதைபந்தாட்டக் கழகம் அண்மையில் தீவுப்பகுதி சாம்பியனாகி வடமகனதிலும் பல சாதனைகளை படைத்துள்ளது .புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் உதைபந்தாட்ட அணியும் வலைபந்தட்ட பெண்கள் அணியும் உன்னத சாதனைகளை செய்துள்ளது மேட்குரிபிட்ட கழகங்கள் எல்லாமே சில காலங்களில் தாச்சி என்னும் கிளித்தட்டு விளையாட்டையும் விளையாடி வருவார்கள் .மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் அவ்வப்போது கிரிக்கெட்டும் விளையாடி  வந்திருகிறார்கள் , எமது ஊரில் பல சுதேச விளையாட்டுக்களும் மக்கள் விளையாடி வந்துள்ளனர் .கிட்டி அடித்தல் ,தாச்சி,மாபிள் அடித்தல் ,போன்றவைஅவை . எமது ஊரில் நிறைய குளங்கள் ,கடற்கரைகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள்  நீச்சலில் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர் . இனி தனிப்பட்ட ரீதியில் நிறைய வீரர்கள் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளனர் . முக்கியமாக சி.தனபாலசுந்தரம்(ஒட்ட்டம் -வடமாகான  முதல் இடம்--அகில இலங்கை இரண்டாம் இடம் ),சதானந்தன் (குண்டெறிதல் .வடமாகாண முதலாம் இடம் ),இன்னும் வி.லோகநாதன் (சிவா)-குண்டு, கனகராசன் .புங்குட்தீவு 2(ஓட்டம் )   கைலைவாசன் (மரதன்)என்போரும்  இடம் பிடிகிர்ரர்கள் .