புதன், 5 அக்டோபர், 2011


சிவராசா ஸ்ரீ சஜிதா
(நாடு கடந்த தமிழீழ அரசு பாராளுமன்ற உறுப்பினர் )

ஸ்ரீ சஜிதா புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட வீரகத்தி சிவராசாவின் புதல்வியாவார் .சுவிட்சர்லாந்த் செங்காலன் நகரில் வசித்து வரும் இவர் தனது உயர்கல்வியை கற்றுக்கொண்டு தமிழினத்தின் விடுதைலைக்காக ஏராளமான செயலபாடுகளில்  தன்னை அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார் .இளைஞர் அமைப்பில் இணைந்து  எமது இனத்தின் விடிவுக்காக பல திட்டங்களை முறைப்படி ஒழுங்கு படுத்தி செயலாக்கி வருகிறார்.தமிழ் ஜெர்மன் பிரஞ்சு ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரிச்சயமான ஸ்ரீ சஜிதா மிக இளம் வயதிலே சமூக இன மொழி சேவை புரிய வந்திருப்பது பாராட்டுக்குரியதே .இளம் தலை முறைக்கு முன்னுதாரணமாக திகழும் இவர் கடந்த மார்ச் மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சங்க கூட்டத்தில் தமிழரின் விடிவுக்காய் ஆங்கில மொழியில் ஓங்கி ஒலித்த காட்சி எல்லா ஊடகங்களையும் அலங்கரித்தது  நினைவிருக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக