வெள்ளி, 30 செப்டம்பர், 2011

சுந்தரேஸ்வரக் குருக்கள்

கனேசராசக்  குருக்கள்   சுந்தரேஸ்வரக் குருக்கள் 
-------------------------------------------------------------------
புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகக்  கொண்ட இந்த இந்து மதகுருவானவர் மடத்துவெளி கமலாம்பிகை மக வித்தியாலயத்தில் கல்வி கற்ற பின்னர் புங்குடுதீவு கிழக்குப்  பகுதிகளில்   உள்ள பல ஆலயங்களில் தந்தையுடன் இணைந்து கிரியைகளை மேற்கொண்ட பின்னர் சுவிசுக்கு இடம்  பெயர்ந்தார் சுவிசில் உள்ள ஓல்டன் மாநகரில் சில சைவ அடியார்களை அழைத்து இங்கே  ஒரு ஆலயத்தினை அமைப்பதகான முயற்ற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.இந்த வகையில் மனோன்மணி அம்பாள் என்னும் பெயரில் இந்த ஆலயம் உறுவாக்க்க பாடு பட்ட  இந்த சைவகுரு இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரும் பாட்டார்.அனமியில் புதிய ஆலயத்தை அமைக்கும் பணியில் ஈடுபடிருந்தார் சொந்த காணியை வங்கி அதில ஒரு அழகான ஆலயத்தை காடும் எண்ணத்தில் மக்களிடம்  கணிசமான நிதியை சேர்த்து வைத்து கட்டும் பணிகளில் ஈடுபட்டு  வருகிறார் சுவிசில் உள்ள எராளமான இந்து சமயத்தவரின் கிரியைகளை திறம்பட  நடத்தி முடித்தவர் .ஐவரும்   ஏராளமான தாயகத்துகான   உதவிகளையும் வழங்கி சுவிச்ல் தமிழரின் சேவையையும்  செய்து வந்துள்ளார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்ப காலம் தொட்டு போசகராக இருந்தும் நிறைய பணிகளை செய்துள்ளார் 

நாகரத்தினம் கணேசரத்தினம் , சாந்தரதினம் சகோதரர்கள்

நாகரத்தினம்  கணேசரத்தினம் ,  சாந்தரதினம்        சகோதரர்கள்

----------------------------------------------------------------------------------
புங்குடுதீவு   ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நாகரத்தினம் கோணேஸ்வரி தம்பதியின் புதல்வர்களான கணேசரத்தினம் சந்தரத்தினம் சகோதரர்கள் சுவிசிலே சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள் .புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர்கள் தமது நிலைமைப் பருவத்திலேயே நெடுங்கேணியில் வர்த்தக நிறுவனங்களை நிறுவி உயர்ந்த நிலையில் வணிகம் செய்து வந்தார்கள்.சுவிசிலும் இவர்கள் இரண்டு பிரபலமான வர்த்தக நிறுவனங்களை அமைத்துளார்கள். சுவிஸ் ஜூரிச் நகரிலே என் எஸ் யுவல்லேரி யும் பெர்ணிலேஎன் ஆர் ஜுவல்லரி அண்ட் டெக்ஸ்தைலையும் தம்மகத்தே கொண்டுள்ள இவர்கள் சுவிசில் நடைபெறும் பல நல்ல சம்மோக தொண்டுகளுக்கும் உதவி வருகிறார்கள் .

புதன், 28 செப்டம்பர், 2011

thirumathi (ராஜகோபால் )

பிரசன்னா  சாதுஜா (ராஜகோபால் )

புங்குடுதீவு பத்தாம் வட்ட்ரத்தை
பிறப்பிடமாக கொண்ட பிரசன்னா  சாதுஜா   (ராஜகோபால் ) கொக்குவிலில் ஆரம்பகல்வியை கற்ற பொது இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தார் .அங்கே சில ஆண்டுகள் ஆங்கில மூலக் கல்வி கற்ற பின்னர் சுவிசுக்கு புலம் பெயர்ந்து உயர்கல்வியை கற்று தேறினார் .தாயகத்தில் இருந்த காலத்தில் முறைப்படி பரத நாட்டியத்தை சாந்தினி சுப்பையாவிடம் கற்று தொடன்ர்து இந்தியாவிலும் நாடிய கல்வியை தொடர்ந்திருந்தார் .சுவிசுக்கு வந்ததும் பரதக்கலையை வாணி நடராசாவிடம் கற்று பின்னர் திருக்கொநேச்வர நடனாலயத்தில் தொடர்ந்தார் .வெகு குறைவான் காலத்திலேயே பரத்தின் நுணுக்கங்களை எல்லாம் கற்றதனால் 1996இல் பெர்னில் தனது அரங்கேற்றத்தை மேடையேற்றினார் .   திருக்கொனேஸ்வரா நடனப்   பள்ளியின் முதல் வரிசை மாணவிகளின் பட்டியலில் இடம்பிடித்து உரிய காலத்தில் அரங்கேற்றத்தை செய்து கொண்டார்.இந்த நடனப் பள்ளியில் அரங்கேற்றம் செய்த இரண்டாவது மாணவி இவராவார்.அரன்கேற்றதுடன் நின்று விடாது பரதனாடிய ஆசிரிய உரித்துக்கான கல்வியை மேற்கொண்டு அதற்கான தகுதியை அடைந்த இவர் தொடர்ந்து தான்  கற்ற கல்வியை வீணாக்காது மற்றவரும் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கோடு சுவிசில் பற்றாக்குறையாக உள்ள நடன ஆசிரியர்களின் குறை நீங்கு முகமகவும் தானே ஒரு  புதிய நடனப் பள்ளியை ஆரம்பித்து  ஏராளமான மாணவர்களுக்கு நடனக் கலையை  புகட்டி வருகிறார்.தனது பிறந்த ஊரின் குலதெய்வமாம் கண்ணகியின் பெயரிலே  கண்ணகை பரத கூடம் என்ற பெயரில்தனது பாடசாலையை அழகுற நாமம் இட்டுள்ளது குறிப்பிடத் தக்கது  புகழ் போதை  இல்லாத இந்த ஆசிரியை ௨௦௧௦ இல் புங்குட்தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் வேரும் விழுதும் நிகழ்வை தனது மாணவர்களை கொண்டு தனது நாட்டிய கோலங்களால் அழகுற  செய்தார் .இந்த நிகழ்வில் இவரது மாணவர்களின் தசாவதாரம் நாட்டிய நாடகம் பார்வையாளர்களை மெய் மறக்க செய்திருந்தது .இவரில் மாணவர்கள் பலர் நாட்டிய மயில் போன்ற நடன விழ போட்டிகளில் பங்கு பற்றி ஏராளமான பரிசில்களை பெற்றுள்ளனர்.

செல்லத்துரை சதானந்தன்

செல்லத்துரை  சதானந்தன் 


புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை  பிறப்பிடமாகக் கொண்ட சதானந்தன் ஆரம்பக் கலவியை சண்முகநாதன் வித்தியாலயத்தில் கற்றார் .எண்பதுகளின் இறுதியில் சுவிசுக்கு புலம் பெயர்ந்த சதானந்தன் சுவிசின் பல மேடைகளில் ^^பாட்டிங் பாட்டிங் ^^ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை ஈழத்துக் கலைஞர்கள் கோமாளிகள்  பாணியில் நடத்தி புகழ் பெற்றார் .சிறந்த உதைபந்தாட்ட வீரராக விளையாட்டுக்  கழகங்களில்   களமாடிக் கொண்டிருந்த காலம் அது.எமது தமிழ் மக்களை மேற்கு நாடுகளின் தரத்துக்கு சிறந்த விளையாட்டு  வீரர்கள் ஆக்கச்  சரியான வழி எதுவென சிந்திக்கலானார் .அதன் பிரகாரம் சிறுவயதில் இருந்து படிப்படியாக முறையாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ரீதியில் லீஸ் இள நட்சத்திர விளையாட்டுக் கழகத்தை உருவாக்கி பல வயதுப் பிரிவுகளிலும் வீரர்களை உள்வாங்கி பயிற்ருவித்து சுற்று போட்டிகளை சந்திக்க செய்தார் இதிலே பெரும் வெற்றிக  ளைக்   கண்டார் .சுவித்சர்லாந்தில்யே அதிக சாதனைகளை படைத்து அதிகூடிய வெற்றிக் கிண்ணங்களை பெற்று வருகிற ஒரு கழகம் இதுவாகும் .முக்கியமாக  புங்குடுதீவு  மண்ணை சேர்ந்த வீரர்களை பெரும்பாலும் உள்ளடக்கிய கழகம் இதுவேயாகும் .பல அமைப்புகளுடன் இணைந்து விளையாட்டுத் துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளார் .அத்தோடு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திலும் தன்னை இணைத்து கொண்டு இன்று வரை அறிய பல பணிகளை செய்ய உறுதுணையாக இருந்துள்ளார் .மேலும்ஐரோப்பாவின் இயந்திரமாய
வாழ்க்கைக்கு மத்தியில் இசைக்குழுக்களை நடத்துவது கஷ்டமா என உணர்ந்து நவீன வடிவமான கரோக்கோ இசைக்குழுவை அமைத்து நிர்வகித்து வருகிறார். சுவி மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் இசை நிகழ்சிகளை நடத்தி புகழோடு விளங்கும் இவரது சுவிஸ் ராகம் இசைக்குழு பெரும்பாலான தாயாக பணிகளுக்கென நிதிப் பங்களிப்பையும் செய்து வருகிறது.இந்த இசைக் குழுவின் அறிவிப்பாளராகவும்  இயக்குனராகவும் இருந்து வருகிறார் 

இராசையா சண்முகராசா

இராசையா சண்முகராசா 
 புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை
பிறப்பிடமாகக் கொண்ட சண்முகராசா ஆரம்பக்கல்வியை ஊரதீபு திருநாவுக்கரசு வித்தியாசாலையிலும் தொடர்ந்து கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியையும் கற்று தெரிய பின் எண்பதுகளின் மத்தியில் சுவிட்சர்லாந்துக்கு(Bern  )புலம் பெயர்ந்தார் .அந்த காலம்  எமது தாய் மொழியில் பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகள் இல்லாத ஒரு காலம்.அதனை விட சுவிசுக்கு தமிழர் வந்த உடனேயே சுவிஸ் மொழிகளைக் கற்க முடியாத நிலை. சன்முகராசாவும் இன்னும் சில இளைஞர்களும் இணைந்து புதிய மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் விதமாக மனிதம் என்னும் பெயரில் ஒரு சிறிய அமைப்பை உருவாக்கினார்கள்.இந்த அமைப்பின் மூலம் மனிதம் என்னும் சஞ்சிகையை பிரசுரித்தார்கள். கணணி புழக்கம் இல்லாத அல்லது தமிழ் எழுத்து வரிவடிவம் வராத அந்த காலத்தில் வெறுமனே நிழல்படபிரதி எடுக்கும் முறையை மட்டும் பயன்படுத்தி இந்த சஞ்சிகையை வெளியிட்டனர் .வேறு தமிழ் பத்திரிகைகளில் தாயாக இந்திய நாடுகளில் வரும் முக்கிய செய்திகள் கட்டுரைகளை வெட்டி பிரதி எடுத்து இணைத்தனர் . மிகுதியை தமது கை எழுத்து பிரதியாக எடுத்து சேர்த்தனர் .
புலம்பெயர் நட்டு செய்திகள் தகவல்கள்  பயனுள்ள கட்டுரைகள் எமகீல்லாம் அந்த வேளையில் தேவையான அம்சங்கள் வள தொடங்கியுள்ள இந்த நாடுகள் பற்றிய தகவலகள் என சிறப்பாக தொகுக்கப்பட்டு வெளிவந்த சஞ்சிகைகள் மனிதம் எனலாம் .மதம் ஒரு தடவையாக வெளிவந்த இந்த மனிதம் சஞ்சிகையை ஆசிரிய பீடத்தில் இருந்து அலங்கரித்தார் இ.சண்முகராசா .சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த மனிதம் வெளியானது பாராட்டத் தக்கதே 

செவ்வாய், 27 செப்டம்பர், 2011


தகவல் அரங்கம் பகுதி 1
Posted on December 29, 2009 at 11:22 PMComments comments (0)

பெரியோர்கள் 1

பொன.கனகசபை --வித்துவான் -ஆன்மிகம்

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கனகசுந்தரம் பாலகுமார்

கனகசுந்தரம் பாலகுமார் 
புங்குடுதீவு எட்டாம் வட்டாரம் மடதுவெளியைப் பிறப்பிடமாக கொண்ட
பாலகுமார் தனது ஆரம்பக் கல்வியை கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் கற்ற பின்னர் யாழ் இந்து கல்லூரியில் உயர்கல்வியை பெற்றார் .மடத்துவெளி சனசமூக் நிலையத்தின் ஆரம்ப களம் தொட்டே அதன் வளர்ச்சிக்கு பாடுபட்ட இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்.மடத்துவெளி சனசமூக நிலையத்தின் உதைபந்தாட்ட அணியின் முன்னணி தாக்குதல் வீரரான பாலகுமார் பல சாதனைகளை அந்த மண்ணில் படைத்துள்ளார் .இவர் 15. 01 . 1985 இல் தாயகத்தை விட்டு நீங்கி சுவிட்சர்லாந்தில் குடியேறினார் .சுவிசின் பாசல் நகரில் வசித்து வரும் இவர் இங்கேயும் தனது விளையாட்டு திறமையால் சிறப்புற புகழ் பெற்றார் .பாசல் தமிழ் நீலப் பறவைகள் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகராகிய பாலகுமார் அதனை நிறுவினார்  இந்தக் கலக்கம் சுவிசிலேயே
முதன்முதலாகவும் ஒரே ஒருகழகமாகவும் பதிவு செய்து முறைப்படி சுவிசர்லாந்து கழகங்களுக்கு இணையாக லீக் எனப்படும்பிரிவில்  சம்மேளன அடங்கலில் உள்வாங்கப் பட்டதாகும் .இந்த கழகத்தின் அணித்தலைவராக நீண்ட காலம் பதவி வகித்து தொன்னூறுகளில் பல சாதனைகளைச் செய்ய வழிகாட்டினார்.சுவிற்ற்சர்லாந்தின் பல கழகங்களின் உருவாக்கத்துக்கும் சுற்றுப் போட்டிகளுக்கும் முன்னோடியாக  உதவி புரிந்தார் .இந்த கழகத்தின் மூலம் பல சமூக பங்களிப்புகளையும் ஆற்றி வந்துள்ளார் .இன்றும் பாசல் நகரின்  விளையாட்டு துறை இவரை பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றது 

எஸ் .கண்ணதாசன்

எஸ் .கண்ணதாசன் 
 புங்குடுதீவின்  12ஆம்
வட்டாரத்தை சேர்ந்த கண்ணதாசன் கணேச மக வித்தியாலயம் .மக வித்தியாலயம் என்பவற்றில் கல்வி கற்று எண்பதுகளின் மத்தியில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பதிலேயே அதில் சேர்ந்து பணியாற்றியவர்.சுவிஸ் லவுசான்(LAUSANNE) நகரில் வாழும் இவர் ஒன்றியத்தின் பிராந்திய பொறுப்பாளராக இருந்து வந்தார் .கண்ணதாசன் இளமை காலத்தில் இருந்தே தமிழ் மேல் ஆர்வம் கொண்டு கவிதை , விமர்சனங்களை எழுதி வருகின்றார் .தனது எழுத்துக்களில் தன எண்ணியதை சொல்ல வந்ததை ஆணித்தரமாக எழுதுவது இவரது சிறப்பம்சம்..பிறந்த ஊரில் பற்று கொண்ட இவர் சமூக சேவையிலும் ஈடுபாடு கொண்டவர் .சொந்த நாடிலும் தான் வாழுகின்ற நாட்டிலும் நிறைய சமொக்கப் பணிகளில் தன்னை ஈஎடுபடுத்தி உள்ளார் 

ஐயாத்துரை தர்மகுலசிங்கம்

ஐயாத்துரை தர்மகுலசிங்கம் 

புங்குடுதீவு எட்டாம் வட்
டாரம் நாகதம்பிரான் கோவிலடியைச் சேர்ந்த யாதுரை தர்மகுலசிங்கம் கமலம்பிகைவிதியலயத்தில் ஆரம்ப கல்வியைத் தொடங்கி பின்னர் உயர்கல்வியை மகா வித்தியாலயத்தில் முடித்த பின்னர் பல்கலைக்க் கழகம் புகுந்து கலைத்துறைப் பட்டதாரியாகினார் .புங்குடுதீவு கிழக்கின் பிரபலமான சமூகத் தொண்டர் ஐயாத்துரை ஆசிரியரின் மகனான இவர் தனது தந்தைக்கு சமூக சேவையில் முழு உதவியும் புரிந்து வந்தார் .வல்லன் சனசமூக நிலையம் ,மடத்துவெளி சனசமூக நிலையம் ,கிராம முன்னேற்ற சங்கம் என அணைத்து சமூக அமைப்புகளிலும் சேவை ஆற்றியவர.சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக சுவிசில் வசித்து வரும் இவர் இங்கு சிறப்புற பிஞ்சு மொழியை கற்று உள்ளார் .இங்கும் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஆரம்பம் முதலே அவர் வாழும் வோ( VAUD ) மாநிலப் பொறுப்பாளராக இருந்து வருகிறார் 

பாலசுப்பிரமணியம் சிவசூரியதாஸ்

பாலசுப்பிரமணியம் சிவசூரியதாஸ் 

 புங்குடுதீவு ஏழாம் வட்டாரம்
அ.ப.பாலசுப்பிரமணித்தின் புத்திரனான சிவசூரியதாஸ் தந்து உயர்கல்வி வரை கமலம்பிகைவிதியால்யதில் கற்றபின்ன்னர் சுவிட்சர்லாந்துக்கு   .  .  வந்து சேர்ந்தார் . சுவிஸ் லவுசான் நகரில் குடியேறிய மோகன் ஏன்று அழைக்கப் படும்   சிவசூரியதாஸ் தந்து வழமையான தொழிலோடு கணணியியலை திறம்பட கற்று வந்தார்.கணனியின் எல்லா வகையான தொழில் நுட்பத்தையும் கற்று தெரிய இவர் தான் கற்றதை மற்றவரும் பெறவேண்டும் என்ற நல்நோக்கோடு வாழ்ந்து வரும் நகரில் கணணி அறிவியலை நீண்ட காலமாக கற்பித்து வருகிறார். இவருடைய சேவையைப் பெற்று ஏராளமான மாணவர்கள் கணனியில் முழுமையான அறிவை உள்வாங்கி வெளிய்ரி உள்ளது குறிப்பிடத்தக்கது .புங்குடுதீவு மக்கள் வில்லிபுணர்வு ஒன்றியத்தின் ஆரம்பகால முதலே பிராந்திய பொறுப்பாளராக வும் பங்காற்றி ஊருக்கான பணியில் தன்னை இணைத்துள்ளவர் ஆவார் .

திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி

திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி 

புங்குடுதீவு ஒன்பதாம் வட்டா

இராசமாணிக்கம் ரவீந்திரன்1

புங்குடுதீவு எட்டம் வட்டாரம்
மடத்துவெளியை பிறப்பிடமாக கொண்ட இராசமாணிக்கம் ரவீந்திரன்27.12.1984. . இல்தாயகத்தில் இருந்து
 சுவிசுக்கு இடம்பெயர்ந்தார் .சுவிசில் வோ மாநிலத்தின் பே என்னும் நகரத்தில் தனது ஆரம்ப வாழ்க்கையை பழக்கி கொண்டவர் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தயாளிநியைத் தன வாழ்க்கை துனையாக்க்கி கொண்டார் .
கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி வரை கற்ற இவர் தனது சகோதர்களுடன் இணைந்து கொழும்பு மாநகரில் வர்த்தக நிறுவனங்களை திறம்பட நடத்தி வந்தார் .மடத்துவெளி சனசமூக நிலையத்தின் செவைபுரிதலில் தன்னை இணைத்துக் கொண்டவர் இந்த நிலையத்தின் வாசிகசாலையின் நூலகராக பணியாற்றி உள்ளார்.சுவிசில் சிறந்த கரப்பந்தாட்ட வீரராக எண்பதுகளில் திகழ்ந்த இவர் இங்கும் ஆரம்பத்தில் லவுசான் சொலோதூன் ஆகிய நகரங்களில் இரு வர்த்தக நிறுவனங்களை உருவாக்கி இருந்தார் .பின்னர் தற்போதைய சாயி இம்போர்ட் என்ற சுவிசின் பிரபலமான ஏற்றுமதி இறக்குமதி ஸ்தாபனத்தை நிறுவி திறம்பட வணிகம் செய்து வருகிறார்.இதன் மூலம் ஈட்டிய  பொருளில் தாயக விடுதலைக்கான பங்கோடு எமது ஊருக்கான பொருளாதார உதவிகளையும் செய்து வருகிறார்.புங்குடுத்ழீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்தே போசகராக அங்கம் வக்க்கித  ரவீந்திரன் முதல் ஒன்றியத்தின் தலைவராக பொறுப்பேற்று அதன் பணிகளை செவ்வனே ஆற்றுகிறார்.இவர் தனிப்பட கமலாம்பிகை வித்தியாலயத்தின்நுழைவாயிலைஅழகுற  செப்பனிட்டு கடந்த மார்ச் 2011இல்  திறந்து வைத்துள்ளார்  .அத்தோடு சண்முகநாதன் வித்தியாலயம் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு இயங்குவதற்காக முதல் பங்களிப்பை வழங்கி தொடக்கி வைத்துள்ளார்.தாயக காப்பு ,சமூக சேவை.ஊருக்கான பங்களிப்பு என பல வகையிலும் முன்னின்று முகம் சுளிக்காது உதவி வரும் இவர் தான் செய்கின்ற நற்காரியங்களுக்கு விளம்பரம் தேடிகொள்ளாத  தன்னடக்கவாதியாவர் .இவரது உதவும் பணிகளில் இவரது சகோதர்களும் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது

வியாழன், 8 செப்டம்பர், 2011

சதாசிவம் சிவகுமார் (சுதன் )

சதாசிவம் சிவகுமார் (சுதன் )
----------------------------------------
புங்குடுதீவு 3ஆம்
வட்டாரத்தை சேர்ந்த   இவர் சுவிட்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்து இரு தசாப்தங்கள் கடந்து விட்டது.புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை மற்றும் மகா வித்யாலயா தில் கல்வி கற்ற இவர் சமூக தொண்டை சிரித்த முகத்தோடு ஏற்று செய்வது அலாதியானது.நீண்ட காலமாக தாயக விடுதலைக்காக சிறந்த செயற்பாடுகளில் தன்னை  நிரூபித்தவர்.ஐரோப்பாவின் இயந்திர வாழ்க்கைக்கு மத்தியிலும் தாயக நேசிப்பின் உச்சமாய் இவர் திகழ்கிறார் .ஆரம்பத்தில் இருந்தே புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக உள்ள இவர்
ஒன்றியத்தின் அனைத்து செயல் பாடுகளிலும் முன்னின்று செயல்பட்டவர் 

குகராசன்1


விசுவலிங்கம்  குகராசன் 
---------------------------------

சுவிட்சர்லாந்துக்கு  புலம்பெயர்ந்து சுமார்  வருடங்களாக வாழ்ந்து வரும் குகராசன் புங்குடுதீவு  12ஆம் வட்ட்ரதைப் பிறப்பிடமாக கொண்டவர் .கணேச மக வித்தியாலய பழைய மாணவரான குகன் முத்தமிழ் செல்வியை துணையாக்கி கொண்டு வாழ்ந்து வருகிறார் .தாயகத்தில் தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவிலின் தொண்டிலே தன்னை இள வயதில் ஈடுபடுத்திக் கொண்டவர்
சுவிசில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவரான இவர் தொடர்ந்து மத்திய குழு உறுப்பினராக இருந்து சிறப்பாக சேவை செய்து  வருகிறார் .ஒன்றியத்தின் செயல்பாடுகளை கோவைப் படுத்தல் நிதியியல் கையாளல் ,ஒழுங்கு படுத்தல் என இவரது பணிகளை ஒன்றியம் உள்வாங்கி வளர்ச்சி கண்டுள்ளது உண்மைகணேச
  வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்திலும் தன்னுடைய சேவையை ஆற்றிய குகன் பின்வந்த காலங்களில் தாயக விடுதலைக்கும் பணியாற்ற ஆரம்பித்தார்.சுவிஸ் பேணில் உள்ள தாய்மொழி மற்றும் அழகியல் கல்வியை கற்பிக்கிற தமிழருக்கான  அமைப்புக்கு பொறுப்பாக இருந்து நீண்ட காலமாக காத்திரமான பங்களிப்பை செய்து வந்தார் .அதியுச்ச நிலையில் விடுதலைப் பணி செய்த குகன் புங்குடுதீவு ம்ணனுக்கு பெருமை சேர்த்துள்ளார் .கணேச
  வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்திலும் தன்னுடைய சேவையை ஆற்றிய குகன் பின்வந்த காலங்களில் தாயக விடுதலைக்கும் பணியாற்ற ஆரம்பித்தார்.அதியுச்ச நிலையில் விடுதலைப் பணி செய்த குகன் புங்குடுதீவு ம்ணனுக்கு பெருமை சேர்த்துள்ளார் .

நிமலன்1

அரியபுத்திரன்  நிமலன்
----------------------------------
புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த நிமலன் கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் ஸ்டான்லி கல்லூரியில் உயர் கல்வியையும் கற்றுத் தேறியவர் .சுமார் 25வருடங்களாக சுவிசில் வசித்து வரும் இவர்   தாயகத்தில் இவரது ஒன்று விட்ட சகோதரரான எஸ்.கே.மகேந்திரனின் பாசறையில் வளர்ந்து ஊரதீவு இளம்தமிழர் மன்றம் , சனசமூக நிலையம் என்பவற்றின் முக்கிய நிர்வாகப் பதவிகளில் இருந்து சமூக சேவை செய்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் ஆன்மீகப்பணி சமுக ப்பணி என்பவற்றில் ஈடுபாடு காடடும் நிமலன் புங்குடுதீவு மக்கள் விழிப்புணவு ஒன்றியத்தின் செயல்பாடுகளில் தன்னை ஒருங்கிணைத்து பணியாறுகிறார்.ஆரம்பத்தில் பிராந்திய பொறுப்பாளராக இருந்து வந்த நிமலன்  2009முதல் செயலாளராக திறம்பட திட்டமிட்டு ஒன்றியத்தை வளர்ச்சி பாதையில் இட்டு செல்கிறார்ஒன்றியம் அண்மையில் நடாத்திய ''வேரும் விழுதும் '' விழா இவரது செயல் பாட்டின் வேகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.சிறந்த எழுச்சி முக்கு பேச்சாற்றல் கொண்ட நிமலன் ஆன்மீகப் பணியிலும் செவ்வனே தன்னை அர்ப்பணித்துள்ளார் .பேரன் சைவநெறிகூடத்தின் ஞான லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சைவ தொண்டில் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் நிமலன் திட்டமிட்டு செயல்பாடுகளை கொண்டு செல்வதில் வல்லவராக திகழ்கிறார் .இவரது துணைவியாரும் நல்ல சைவ சமய தொண்டர்கள் குடும்பத்தில் இருந்து வந்தமையினால் இவருக்கு ஈடுகொடுத்து ஆண்மீகப்பநியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது 

சின்னதுரை கருணாமூர்த்தி 1

சின்னதுரை கருணாமூர்த்தி 1
--------------------------------------
புங்குடுதீவு பத்தாம்
வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கருணாமூர்த்தி புங்குடுதீவுகணேச மக வித்தியாலயம் .புங்குடுதீவுமகாவித்தியாலயம் என்பவற்றில் கல்வி கற்று சுவிசர்லாந்துக்கு எண்பதுகளின் ஆரம்பத்தில் புலம் பெயர்ந்து வந்தார்.காலக்கிரமத்தில் மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த மஞ்சுளாவை கரம்பிடித்து இல்லறம் புரிகிறார்.கருணாமூர்த்தி ஆரம்பத்தில் புங்குடுதீவு கணேச
வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்து கொண்டு தொண்டாற்றினார் . அதன்
நிர்வாகத்தில் பல பதவிகளை அலங்கரித்து திறம்பட இயக்கி வந்தவர் .
பின்னர் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக இணைந்து ஒன்றிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார் .நிர்வாகத்தின் செயல்பாடுகளை கொவைப்படுத்தி திட்டமிட்டு பணியாற்றியவர்.
பேரன் கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்திலும் தனது ஆன்மீகப் பணியை செவ்வனே ஆற்றி உள்ள கருணாமூர்த்தி சைவ சமய ஈடுபாடு மிகக்  கொண்டவர்.இந்த  ஆலயத்தின் நிர்வாக சபையில் இவர் பொருளாளராக இருந்து வலி நடத்திய களம் பொற்காலம் எனலாம்.நேர்மை தூய்மைக்கு இலக்கணமாக  இந்த காலத்தில் இவர் முன்னுதாரணமாக திகழ்ந்தார்  திருமுறைகளை பக்திபரவசமாக ஓதுவதில் வல்லவர்.தமிழ் மக்கள் சுவிசுக்கு புலம்பெயர்ந்த ஆரம்பத்தில் சைவ சமயக் கிரியைகளான மரணச சடங்கு அந்தியேட்டி மஞ்சள் நீராட்டு விழ திருமணம் என் அனைத்திலும் முன்னின்று சரியான முறைப்படி செய்து உதவி வந்தவர் எனலாம்  இவரது சகோதரியின் கணவரான தம்பியையா தேவதாஸ் சிரமப்பட்டு எழுதிய  ^புங்குடுதீவு-வாழ்வும் வளமும் ' என்ற நூலினை தானே பொறுப்பேற்று வெளியிட்டு வைத்ததோடு சுவிட்சர்லாந்தில் அந்த நூலின் வெளியீட்டையும் சிறப்பாகக நடத்தி வைத்த  பெருமைக்குரியவர் . அதன்
நிர்வாகத்தில் பல பதவிகளை அலங்கரித்து திறம்பட இயக்கி வந்தவர் .
பின்னர் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக இணைந்து ஒன்றிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார் .நிர்வாகத்தின் செயல்பாடுகளை கொவைப்படுத்தி திட்டமிட்டு பணியாற்றியவர்.
பேரன் கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்திலும் தனது ஆன்மீகப் பணியை செவ்வனே ஆற்றி உள்ள கருணாமூர்த்தி சைவ சமய ஈடுபாடு மிகக்  கொண்டவர்.இந்த  ஆலயத்தின் நிர்வாக சபையில் இவர் பொருளாளராக இருந்து வழி   நடத்திய காலம் பொற்காலம் எனலாம்.நேர்மை தூய்மைக்கு இலக்கணமாக  இந்த காலத்தில் இவர் முன்னுதாரணமாக திகழ்ந்தார்  திருமுறைகளை பக்திபரவசமாக ஓதுவதில் வல்லவர்.தமிழ் மக்கள் சுவிசுக்கு புலம்பெயர்ந்த ஆரம்பத்தில் சைவ சமயக் கிரியைகளான மரணச சடங்கு அந்தியேட்டி மஞ்சள் நீராட்டு விழ திருமணம் என் அனைத்திலும் முன்னின்று சரியான முறைப்படி செய்து உதவி வந்தவர் எனலாம்  இவரது சகோதரியின் கணவரான தம்பியையா தேவதாஸ் சிரமப்பட்டு எழுதிய  ^புங்குடுதீவு-வாழ்வும் வளமும் ' என்ற நூலினை தானே பொறுப்பேற்று வெளியிட்டு வைத்ததோடு சுவிட்சர்லாந்தில் அந்த நூலின் வெளியீட்டையும் சிறப்பாகக நடத்தி வைத்த  பெருமைக்குரியவர் .
1.செல்லத்தம்பி சிவகுமார் (செல்லா)
-------------------------------------------------
புங்குடுதீவு
ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிவகுமார் ஸ்ரீ கணேச மகா வித்தியாலய த்தில் கல்வி கற்றார்.சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக புலம்பெயர்ந்து தற்போது சுவிசில் வசித்து  வரும் சிவகுமார் தனது முறைப்பெண்ணான நகேஸ்வரியை மணந்துள்ளார்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்தே மத்திய குழு உறுப்பினாராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்.ஒன்றியத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் பாரிய பணியை செய்து செவ்வனே முடித்து வைத்த பெருமைக்குரியவர் .ஒன்றியத்தின் நிதியியலை சிறப்பாக கையாண்டவர்.அத்தோடு சுவிசில்  நீண்ட காலமாக தாயக விடுதலை பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார்.ஆரம்பத்தில் சுவிஸ் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயல்பாடுகளிலும் முழுமனதுடன் செயலாற்றியவர் சிவகுமார் .

புதன், 7 செப்டம்பர், 2011

ஆறுமுகம்  சிவகுமார் 
------------------------------
புங்குடுதீவு  12ஆம்
வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட இவர் கணேச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுபட்ட பின்னர் சுவிசுக்கு புலம்பெயர்ந்தார் .மூன்றாம் வட்டாரம்  வரதாம்பளை கரம்பிடித்த சிவகுமார் அவர்கள் ஒரு சிறந்த சமூக தொண்டனாவார்.புந்கூட்தேவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பகலதிளிருந்தே மதிய குழு உறுப்பினராக இருக்கும் இவர் சேலாந்து பகுதியில் ஒன்றியத்தின்வளர்ச்சிக்கு பாடுபடிருகிறார்.
எடுத்த காரியத்தை எத்தனை கஷ்டத்தின் மத்தியிலும் சிறப்பாக முடித்து வைத்து சாதிப்பவர் இவர். ஐவரும் இவரது துணைவியரும் நீண்ட காலமாக விடுதளைபணிக்க்காக தம்மையே அர்ப்பணித்து வருகிறார்கள் .இவரதுபுதல்வி சுகந்தியை கூட இந்த வழியில் முன்னிறுத்தி வருகிறார்.மேலும் ஒன்றியத்தின் தயாரிப்பில் உருவான பண்டாரவன்னியன் .அந்த ஆலமரதடியிலே போன்ற நாடகங்களில் சிறப்பாக நடித்துள்ளார் .எமது மக்களின் வாழ்வின் இறுதி நாளாம்       மரண சடங்குகளை எந்த வித எதிர்பார்ப்புமின்றி செவ்வனே செய்து வைப்பதில் முன்னிற்கும் சமூகவியலாளன் இவர்

சுப்பையா வடிவேலு

சுப்பையா  வடிவேலு 
------------------------------
புங்குடுதீவு பத்தாம்
வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவிட்சர்லாந்தின் பேர்ன்-தூண் நகரில் இருபத்தேழு வருடங்களா க வசித்தி வருகிறார்.தாயகத்தில் பிரபலமான வர்த்தகர் குடும்பத்தை சேர்ந்த வடிவேலுஅவர்கள் கணேச மகா வித்தியாலயத்தில் கல்வியை கற்று எண்பதுகளின் ஆரம்பத்தில் ச்விச்சுக்கு புலம் பெயர்ந்தார் .மக்களோடு பழகுவதற்கு இனிமையானவரும் எளிமையானவருமான இவர் புங்குடுதீவு
மக்களிடையே பிரபலமான முதற்தர பிரசையாக திகழ்ந்தார் . 15வருடங்களாகதாயக விடுதலைப் பணிக்கென பாரிய அபங்களிப்பை செய்ததன் மூலம் புங்குடுதீவுக்கு பெருமையை சேர்த்தார் .அத்தோடு ஆன்மீகப் பணியிலும் தனது காத்திரமான பணியை புரிந்து கொண்டிருக்கிறார்.இவர் வாழ்கின்ற ஒபெர்லாந்து பிராந்தியத்துக்கென ஒரு ஆலயத்தை அமைப்பதில் முன்னின்று வெற்றி கண்டுள்ளார் .தூண் வீரகத்தி விநாயகர் ஆலயம் இவரது சின்றந்த ஆன்மீக ப பணிக்கு ஒருஎடுத்துக் காட்டாகும் .அத்தோடு சுவிசில் புங்குடுதீவு மக்களின் ஏகோபித்த அமைப்பாக விளங்கும் புங்குடுதீவு மக்கள் விழுப்புணர்வு ஒன்றியத்தை ஸ்தாபிப்பதில் இருந்து மத்திய குழு உறுபினராக இருந்து வழிகாட்டி வருகிறார்.இவரதுமுகராசியும் இனிதாக உறவாடும் தன்மையும் ஒன்றியத்துக்கு பலவழிகளில் உதவி புரிந்தன.தாயகத்தில் ஒரு மூலையில் கிடக்கும் ஊருக்கான அமைப்பின் விழாவுக்கு தமிழகத்தின் மாபெரும் கவிஞரான வைரமுத்துவையே அழைத்து வந்து தனது ஆளுமையையும் அதியுச்சத் திறமையையும் வெளிக்காட்டினார்.புங்குடுதீவுமக்களில் பலருக்கு திருமண நிச்சயதார்தன்களை செய்து வைத்து பெருமை கொண்டார்.மற்றும் ஒவ்வொரு குடும்பங்களிலும்  நடைபெறுகின்ற மரணச் சடங்குகளிலும் முன்னின்றுமுறைப்படி கிரியைகளை ஆற்றி சிறப்பு படுத்தும் ஆற்றல் கொண்டவர்.இவரது பொதுப்பணிக்கு உறுதுணையாக துணைவியார் நவலீலாவும் ஈடுகொடுதமை பாராட்டத் தக்கது.மொத்தத்தில் ஒருசமூக முன்னிலை யாளன் நேரே கூறலாம் 

சனி, 3 செப்டம்பர், 2011

.ஸ்ரீ. .சந்திரபாலன் sri denmark kones selvakumar pushpa bakee
ஜெயந்தன் உதயன் (கிடார் )ரமணன் ஸ்ரீ சஜிதா சுகந்தி சாயி சுமி நிமலன் லுக்ஸ் மகள் நேசன் கமல்  மகன் சுரேஷ் லுசர்ன் மதி சுதன் உதயன்மகன்  தனம் முரளி சண் ரவி வானதி இராசமாணிக்கம் லண்கச்ரி குகன்.vanathi  rohini  vilaiyaddu in pungudutivu pothuvana thokkupukal  vilaiyaddu samookathondu i.gnanasegaram kathiravelu makkal geneva thaa.sivalingam
sports--easten madathuveli cc nasareth sivalaipiddi irupiddi perunkadu  --kundu siva  kundu satha  kilakkoor  oddam thanapalasuntharam cycle makan ranjan yaks kethan uthaya kaousalya sivapalan san  vollyball football