வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கனகசுந்தரம் பாலகுமார்

கனகசுந்தரம் பாலகுமார் 
புங்குடுதீவு எட்டாம் வட்டாரம் மடதுவெளியைப் பிறப்பிடமாக கொண்ட
பாலகுமார் தனது ஆரம்பக் கல்வியை கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் கற்ற பின்னர் யாழ் இந்து கல்லூரியில் உயர்கல்வியை பெற்றார் .மடத்துவெளி சனசமூக் நிலையத்தின் ஆரம்ப களம் தொட்டே அதன் வளர்ச்சிக்கு பாடுபட்ட இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்.மடத்துவெளி சனசமூக நிலையத்தின் உதைபந்தாட்ட அணியின் முன்னணி தாக்குதல் வீரரான பாலகுமார் பல சாதனைகளை அந்த மண்ணில் படைத்துள்ளார் .இவர் 15. 01 . 1985 இல் தாயகத்தை விட்டு நீங்கி சுவிட்சர்லாந்தில் குடியேறினார் .சுவிசின் பாசல் நகரில் வசித்து வரும் இவர் இங்கேயும் தனது விளையாட்டு திறமையால் சிறப்புற புகழ் பெற்றார் .பாசல் தமிழ் நீலப் பறவைகள் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகராகிய பாலகுமார் அதனை நிறுவினார்  இந்தக் கலக்கம் சுவிசிலேயே
முதன்முதலாகவும் ஒரே ஒருகழகமாகவும் பதிவு செய்து முறைப்படி சுவிசர்லாந்து கழகங்களுக்கு இணையாக லீக் எனப்படும்பிரிவில்  சம்மேளன அடங்கலில் உள்வாங்கப் பட்டதாகும் .இந்த கழகத்தின் அணித்தலைவராக நீண்ட காலம் பதவி வகித்து தொன்னூறுகளில் பல சாதனைகளைச் செய்ய வழிகாட்டினார்.சுவிற்ற்சர்லாந்தின் பல கழகங்களின் உருவாக்கத்துக்கும் சுற்றுப் போட்டிகளுக்கும் முன்னோடியாக  உதவி புரிந்தார் .இந்த கழகத்தின் மூலம் பல சமூக பங்களிப்புகளையும் ஆற்றி வந்துள்ளார் .இன்றும் பாசல் நகரின்  விளையாட்டு துறை இவரை பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றது 

எஸ் .கண்ணதாசன்

எஸ் .கண்ணதாசன் 
 புங்குடுதீவின்  12ஆம்
வட்டாரத்தை சேர்ந்த கண்ணதாசன் கணேச மக வித்தியாலயம் .மக வித்தியாலயம் என்பவற்றில் கல்வி கற்று எண்பதுகளின் மத்தியில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பதிலேயே அதில் சேர்ந்து பணியாற்றியவர்.சுவிஸ் லவுசான்(LAUSANNE) நகரில் வாழும் இவர் ஒன்றியத்தின் பிராந்திய பொறுப்பாளராக இருந்து வந்தார் .கண்ணதாசன் இளமை காலத்தில் இருந்தே தமிழ் மேல் ஆர்வம் கொண்டு கவிதை , விமர்சனங்களை எழுதி வருகின்றார் .தனது எழுத்துக்களில் தன எண்ணியதை சொல்ல வந்ததை ஆணித்தரமாக எழுதுவது இவரது சிறப்பம்சம்..பிறந்த ஊரில் பற்று கொண்ட இவர் சமூக சேவையிலும் ஈடுபாடு கொண்டவர் .சொந்த நாடிலும் தான் வாழுகின்ற நாட்டிலும் நிறைய சமொக்கப் பணிகளில் தன்னை ஈஎடுபடுத்தி உள்ளார் 

ஐயாத்துரை தர்மகுலசிங்கம்

ஐயாத்துரை தர்மகுலசிங்கம் 

புங்குடுதீவு எட்டாம் வட்
டாரம் நாகதம்பிரான் கோவிலடியைச் சேர்ந்த யாதுரை தர்மகுலசிங்கம் கமலம்பிகைவிதியலயத்தில் ஆரம்ப கல்வியைத் தொடங்கி பின்னர் உயர்கல்வியை மகா வித்தியாலயத்தில் முடித்த பின்னர் பல்கலைக்க் கழகம் புகுந்து கலைத்துறைப் பட்டதாரியாகினார் .புங்குடுதீவு கிழக்கின் பிரபலமான சமூகத் தொண்டர் ஐயாத்துரை ஆசிரியரின் மகனான இவர் தனது தந்தைக்கு சமூக சேவையில் முழு உதவியும் புரிந்து வந்தார் .வல்லன் சனசமூக நிலையம் ,மடத்துவெளி சனசமூக நிலையம் ,கிராம முன்னேற்ற சங்கம் என அணைத்து சமூக அமைப்புகளிலும் சேவை ஆற்றியவர.சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக சுவிசில் வசித்து வரும் இவர் இங்கு சிறப்புற பிஞ்சு மொழியை கற்று உள்ளார் .இங்கும் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஆரம்பம் முதலே அவர் வாழும் வோ( VAUD ) மாநிலப் பொறுப்பாளராக இருந்து வருகிறார் 

பாலசுப்பிரமணியம் சிவசூரியதாஸ்

பாலசுப்பிரமணியம் சிவசூரியதாஸ் 

 புங்குடுதீவு ஏழாம் வட்டாரம்
அ.ப.பாலசுப்பிரமணித்தின் புத்திரனான சிவசூரியதாஸ் தந்து உயர்கல்வி வரை கமலம்பிகைவிதியால்யதில் கற்றபின்ன்னர் சுவிட்சர்லாந்துக்கு   .  .  வந்து சேர்ந்தார் . சுவிஸ் லவுசான் நகரில் குடியேறிய மோகன் ஏன்று அழைக்கப் படும்   சிவசூரியதாஸ் தந்து வழமையான தொழிலோடு கணணியியலை திறம்பட கற்று வந்தார்.கணனியின் எல்லா வகையான தொழில் நுட்பத்தையும் கற்று தெரிய இவர் தான் கற்றதை மற்றவரும் பெறவேண்டும் என்ற நல்நோக்கோடு வாழ்ந்து வரும் நகரில் கணணி அறிவியலை நீண்ட காலமாக கற்பித்து வருகிறார். இவருடைய சேவையைப் பெற்று ஏராளமான மாணவர்கள் கணனியில் முழுமையான அறிவை உள்வாங்கி வெளிய்ரி உள்ளது குறிப்பிடத்தக்கது .புங்குடுதீவு மக்கள் வில்லிபுணர்வு ஒன்றியத்தின் ஆரம்பகால முதலே பிராந்திய பொறுப்பாளராக வும் பங்காற்றி ஊருக்கான பணியில் தன்னை இணைத்துள்ளவர் ஆவார் .

திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி

திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி 

புங்குடுதீவு ஒன்பதாம் வட்டா

இராசமாணிக்கம் ரவீந்திரன்1

புங்குடுதீவு எட்டம் வட்டாரம்
மடத்துவெளியை பிறப்பிடமாக கொண்ட இராசமாணிக்கம் ரவீந்திரன்27.12.1984. . இல்தாயகத்தில் இருந்து
 சுவிசுக்கு இடம்பெயர்ந்தார் .சுவிசில் வோ மாநிலத்தின் பே என்னும் நகரத்தில் தனது ஆரம்ப வாழ்க்கையை பழக்கி கொண்டவர் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தயாளிநியைத் தன வாழ்க்கை துனையாக்க்கி கொண்டார் .
கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி வரை கற்ற இவர் தனது சகோதர்களுடன் இணைந்து கொழும்பு மாநகரில் வர்த்தக நிறுவனங்களை திறம்பட நடத்தி வந்தார் .மடத்துவெளி சனசமூக நிலையத்தின் செவைபுரிதலில் தன்னை இணைத்துக் கொண்டவர் இந்த நிலையத்தின் வாசிகசாலையின் நூலகராக பணியாற்றி உள்ளார்.சுவிசில் சிறந்த கரப்பந்தாட்ட வீரராக எண்பதுகளில் திகழ்ந்த இவர் இங்கும் ஆரம்பத்தில் லவுசான் சொலோதூன் ஆகிய நகரங்களில் இரு வர்த்தக நிறுவனங்களை உருவாக்கி இருந்தார் .பின்னர் தற்போதைய சாயி இம்போர்ட் என்ற சுவிசின் பிரபலமான ஏற்றுமதி இறக்குமதி ஸ்தாபனத்தை நிறுவி திறம்பட வணிகம் செய்து வருகிறார்.இதன் மூலம் ஈட்டிய  பொருளில் தாயக விடுதலைக்கான பங்கோடு எமது ஊருக்கான பொருளாதார உதவிகளையும் செய்து வருகிறார்.புங்குடுத்ழீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்தே போசகராக அங்கம் வக்க்கித  ரவீந்திரன் முதல் ஒன்றியத்தின் தலைவராக பொறுப்பேற்று அதன் பணிகளை செவ்வனே ஆற்றுகிறார்.இவர் தனிப்பட கமலாம்பிகை வித்தியாலயத்தின்நுழைவாயிலைஅழகுற  செப்பனிட்டு கடந்த மார்ச் 2011இல்  திறந்து வைத்துள்ளார்  .அத்தோடு சண்முகநாதன் வித்தியாலயம் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு இயங்குவதற்காக முதல் பங்களிப்பை வழங்கி தொடக்கி வைத்துள்ளார்.தாயக காப்பு ,சமூக சேவை.ஊருக்கான பங்களிப்பு என பல வகையிலும் முன்னின்று முகம் சுளிக்காது உதவி வரும் இவர் தான் செய்கின்ற நற்காரியங்களுக்கு விளம்பரம் தேடிகொள்ளாத  தன்னடக்கவாதியாவர் .இவரது உதவும் பணிகளில் இவரது சகோதர்களும் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது