வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஐயாத்துரை தர்மகுலசிங்கம்

ஐயாத்துரை தர்மகுலசிங்கம் 

புங்குடுதீவு எட்டாம் வட்
டாரம் நாகதம்பிரான் கோவிலடியைச் சேர்ந்த யாதுரை தர்மகுலசிங்கம் கமலம்பிகைவிதியலயத்தில் ஆரம்ப கல்வியைத் தொடங்கி பின்னர் உயர்கல்வியை மகா வித்தியாலயத்தில் முடித்த பின்னர் பல்கலைக்க் கழகம் புகுந்து கலைத்துறைப் பட்டதாரியாகினார் .புங்குடுதீவு கிழக்கின் பிரபலமான சமூகத் தொண்டர் ஐயாத்துரை ஆசிரியரின் மகனான இவர் தனது தந்தைக்கு சமூக சேவையில் முழு உதவியும் புரிந்து வந்தார் .வல்லன் சனசமூக நிலையம் ,மடத்துவெளி சனசமூக நிலையம் ,கிராம முன்னேற்ற சங்கம் என அணைத்து சமூக அமைப்புகளிலும் சேவை ஆற்றியவர.சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக சுவிசில் வசித்து வரும் இவர் இங்கு சிறப்புற பிஞ்சு மொழியை கற்று உள்ளார் .இங்கும் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஆரம்பம் முதலே அவர் வாழும் வோ( VAUD ) மாநிலப் பொறுப்பாளராக இருந்து வருகிறார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக