ஞாயிறு, 17 ஜூன், 2012


சோம சச்சியின் மறுபக்கம்
உங்களில் யாருக்காவது நான் சொல்லப்போகின்றவிடயம் ஆச்சரியத்தை
ஏற்ப்படுத்தலாம் ஆனால். உண்மை இந்திய சினிமாக்களில் இவரைப்போல் சில கதாப்பாத்திரங்களை தாங்கள் பார்த்திருக்ககூடும்
இவரது தந்தையார் ஒரு அரசியல் கட்சியின் பின்னால் திரிந்து புங்குடுதீவு மக்களுக்கு சேவை ஆற்றுகின்றேன் என்ற காரணத்தால் மகனுக்கு விதானை வேலையை வாங்கித்தர முடிந்தது ஆனால் வேலைக்கான பரீட்சைகளை இவருடைய நண்பரே எழுதினார் என்றால் மிகையாகாது சிங்களமொழித் தேர்வுக்கு அன்றைய காலத்தில் விதானைமார்களில் மூத்தஒருவர் இன்று கனடாவில் வசிக்கின்றார் அவர் தான் பரீட்சைக்கு சமுகம் அளித்து தேர்வு எழுதினார் என்றால் நம்பமுடியாது தான் மான்மியத்தில் விதானைமார்களின் கட்டுரைகளை சச்சி அவர்கள் தான் ஆக்கியிருந்தார் ஆனால் பரீட்சை எழுதிய விதானையார் கடைசியாக நாலு வரியில் வருணிக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
கனடாவிற்கு இவர் வந்த காலகட்டத்தில் இவருடைய தம்பியாருடன் தான் தங்கியிருந்தார் அப்போது இவருடைய குடும்பம் கனடாவிற்கு வருவதற்கு விசாவை எதிர் பார்த்து காத்திருந்தது.

அந்த நேரத்தில் இவருடைய தம்பியாருக்கு திருமணம் நிச்சியக்கப்பட்டு ஏற்ப்பாடுகள் நடந்தபொழுது பெண்வீட்டார் சீதனமாக ஒருதொகை கொடுத்தனர். அந்தபணத்தில் இவர் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி அடுக்கினார் இவருடைய தம்பியோ வாயில்லா பூச்சி அண்ணன் ஏதோ தனக்கு நல்லது செய்கின்றார் என்ற நினைப்பில் திருமண ஆசையில் அமைதியாக இருந்தார் ஆனால் நடந்ததோ வேறு

சீதனப்பணம் மொய்ப்பணம் எல்லாவற்றையும் சேர்த்து
கணக்கை சமப்படுத்தி கல்யாணம் முடிந்து விட்டது இனிமேல் வேறு வீடு பார்த்து போங்கள் இது என்னுடைய வீடு என்று விரட்டி விட்டார் இவரின் குடும்பம் அதே வீட்டிற்கு கனடா விசாவுடன் வந்திறங்கியதும் புதுமணத்தம்பதிகள் மணப்பெண்ணின் தம்பி வீட்டில் தஞ்சம் புகுந்ததும் சோகக்கதை. பின்னாட்களில் அதே தம்பிக்கு அடித்த {649}அதிஸ்டத்தையும் தமதாக்கி ஏப்பம் விட்டு தம்பியை சட்டத்தரணிகளிடம் இன்றும் அலைய விட்டுக்கொண்டிருப்பது ஊருக்கே தெரியும் உங்களுக்கு தெரியாமலா இருக்கும். இதை எழுதசொல்லி தகவல் அனுப்பியது இவரின் தம்பியேதான் என்றால் நம்புவீர்களா?

கனடாவிற்கு வந்து இருபது ஆண்டுகள் ஆனபோதும்
இவரிடம் இல்லாதது வாகன சாரதிப்பத்திரமும் ஒரு வாகனமும் தான் மற்றவர்களின் வாகனங்களை தனதுவாகனம் போலும் உரிமையாளரை சாரதியாகவும்
பாவிப்பதில் கைதேந்தவர்

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தை இவர் தனது முகவரியாகவே வைத்திருந்தார் என்றால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள் ஊருக்கு உழைப்பவன் போல் பாசங்கு செய்து ஊர் அபிமானிகளின் அபிமானத்தை பெற்றுக்கொள்பதில் திறமை வாய்ந்த வல்லவர்

இயல்பாகவே ஒலிவாங்கி இல்லாமலே உரத்து பேசும்
வ்ல்லமை கொண்டவர். இடம் அறிந்து செயல்படுவார்
மற்றவர்கள் பேச தயங்கும் இடங்களில் தடங்கல் இல்லாமல் பேசி தனதுபக்கம் சபையோரை ஈர்ப்பதில் கில்லாடி ஒரே இராகத்தில் தான் பாடுவார்

மற்றவர்கள் எல்லாம் ஏமாற்றும் பேர்வழிகள் தான் மட்டும் ஊருக்கு தொண்டு செய்வது என்று நம்ப வைப்பார் இவருடைய செயல்பாடுகளில் மயங்கிய ஒரு காப்புறுதி முகவர் இரண்டு வருடங்கள் இவருக்கு தனது வாகனத்தை ஓடியதாகவும் தன்னுடைய வாகனத்திலேயே சென்று வேறு ஒரு காப்புறுதி முகவரிடம் இவர் தனது உயிர்காப்புறுதி செய்து கொண்டுவந்ததை பின்பு நாட்களில் அறிந்துகொண்ட காப்புறுதிமுகவர் சாவின் எல்லைக்கே போய் விட்டாராம் இப்போதும் புலம்புவார்

மரணவீடுகளுக்கு முதல் ஆளாக போய் நிற்கும் இவர் எல்லா வேலைகளையும் தானாக முன்னின்று செய்வார்
உறவுகளை பறிகொடுத்தவர்களும் இவர் மீது இரக்கப்படுவர் இவர் கொடுக்கசொல்லும் கை நீட்டும் எல்லேருக்கும் பணம் பட்டு வாடா நடக்கும் உங்களுக்கு என்னமாதிரி என்று இவர்பக்கம் திரும்பும் போது சிவாஜி கணேசனே நடிக்கமுடியாத காட்சியை அரங்கேற்றுவார் எனக்கு தேவையில்லை இறந்தவரின் பெயரால் சங்க ஒன்றுகூடலுக்கு ஒரு தொகை கொடுங்கள் அது போதும் என்பார் இவரல்லவா மனிதன் என்ற மகத்தான பாராட்டைப் பெற்றுவிடுவார்

பத்தாவது நாள் காரியம் முடிந்ததும் இவருடைய காட்சிகள் அரங்கேறும் இறந்தவரின் மகனையே மகளையே தொலைபேசியில் அழைத்து நினைவாஞ்சலி மலர் பற்றி பேசுவார் உங்களுடைய அப்பா/அல்லது அம்மா என்று தொடங்கி தான் மற்றவர்களிடம் கேட்டுவைத்திருக்கும் தகவல்களை தனக்கு தெரிந்தது போல் கூறி தனது நண்பர் ஒரு அச்சகம் வைத்துள்ளதாகவும் நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை தானே எல்லாவற்றையும் பார்ப்பதாக
பரிந்துரை செய்து அச்சகத்திற்கும் அச்சாரம் வாங்கிவிடுவார்

பின்பு தான் கைகாட்டிய அனைவரிடமும் கையூட்டு வாங்க இறந்தவரின் மகனின் வாகனத்திலேயே அவர்களின் ஸ்தாபனங்களில் போய் நிற்ப்பார் என்றால்
நம்பமுடியுமா? ஆனால் அது தான் உண்மை

பின் நாட்களில் ஒன்றுகூடல் நடக்கும் சமயங்களில் தான் சொல்லி வைத்த இறந்தவர்களின் உறவுகளிடம்
முன் கூட்டியே ஞாபகார்த்த பரிசு பணத்தை வசூலித்துவிடுவார் சங்க வட்டார அங்கத்தவர்கள்
இறந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் சொல்லும் கதை சச்சியண்ணன் வந்து வாங்கிகொண்டு போய் விட்டார் ஆனால் சச்சியண்ணன் சங்ககணக்கை வழமைபோல் சமப்படுத்துவார் மொத்தத்தில் சங்கப்பணம் அண்ணனின் பையில் பணத்திற்கு துண்டுவிழும் சங்கத்தின் கையில்

பகுதி இரண்டு நாளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக