ஞாயிறு, 2 அக்டோபர், 2011

கதிர்காமு  சண்முகராசா (சண் .ரவி )
-----------------------------------
இன்றைய இணைய உலகின்
நவீனத்துவத்தின் கதாநாயகர்களில் இ வரும் ஒருவர் தமிழ் ஊடகங்களில் கோலோச்சும் இணைய வரிசையில் முன்வரிசை இடம் எடுத்துள்ள எமது தாய் மண்ணின் படைப்பாளியின் கைவண்ணம் மை கதிரவன் எனபது எல்லோரும் அறிந்ததே .ஆமாம் .புங்குட்தீவு3 ஆம் வட்டாரத்தை சேர்ந்தகதிர்காமு சண்முகராசா சுப்பிரமணிய வித்தியாலயத்தில் ஆரம்பக் கலவியையும் உயர்கல்வியை மக வித்தியலயதிலும் கற்று எண்பதுகளின் பின்பகுதியில் சுவிட்சர்லாந்துக்கு புலம் பெயர்ந்தார் .இளைஞனாக வந்த சண்முகராசா தனது தாயாக விடுதலை போருக்கான பங்கை செலுத்தும் எண்ணத்துடன் அந்த செயல்பாடுகளில் தன்னை இணைத்து கொண்டார்.நீண்ட காலமாக தாயாக பணிகளில் ஈடுபாடு கொண்ட சண்-ரவி
காப்புறுதி வங்கி செயல்பாடுகளை கற்றுதேறி தனியே அவை சம்பந்தமான நிறுவனம் ஒன்றை நிறுவி  செயல் படுத்தி வருகிறார்.பின்னாளில் நவீன ஊடகத்துறையான இணையதளத்தின் உன்னத உயர்ந்த பரந்த செயல்பாட்டின் உச்ச பலன் பற்றி விளங்கி கொண்டவராக அதன் பால் ஈர்க்கப்பட்டு தமிழினத்துக்கு செய்கின்ற ஒரு சேவையாக எமது இனத்தை எழுச்சி கொள்ள வைக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தும் நல நோக்கில் மை கதிரவன் என்ற இணையத்தை ஆரம்பித்தார் .ஆரம்பத்தில் சிறியதாக ஆரம்பித்து  பின் தேவை கருதி ஜனரஞ்சகமான ஒரு பாரிய இணைய தளமாக அதனை உருவாக்கி வெற்றி நடை போட்டு வருகிறார் .தமிழனுக்கு தேவையான அத்தனை அம்சங்களை ஒருமித்து உள்ளடக்கிய ஒரு தளமாக மாற்றி புரட்சி செய்துள்ளார் சண்-ரவி அவர்கள் .எந்த வித வர்த்தக நோக்கமும் இன்றி சாதரணமாக  நடத்தி வருகின்ற இந்த இணையதளத்தின் பார்வையாளர்களின் தொகை நாளுக்கு நாள் பெருகி வருவது இவரது உழைப்புக்கு கிடைத்த உன்னத பலனாகும்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் செயல் பாடுகளிலும்  கணிசமான பங்களிப்பை  செ ய்து வருகிறார் சண்-ரவி  www. mykathiravan  .com    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக