ஞாயிறு, 2 அக்டோபர், 2011

இராசதுரை ஞானசேகரம்

இராசதுரை  ஞானசேகரம் 

புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த
இராசதுரை ஞானசேகரம் கமாலம்பிகை கனிஸ்ட மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கலவியை கற்ற பின்னர் மகா வித்தியாலயத்தில் உயர் கல்வியை பெற்றார் .இளமைக் காலத்தில் இருந்தே  மடத்துவெளி பால சுப்ர மணியர் கோவிலின் வழிபாட்டு மன்றத்தின் ஓதுவாராக இருந்து அரிய தொண்டு செய்த ஒருவர். புங்குடு தீவு மண்ணிலேயே கூட்டுபிரார்த்தனைக்கு பெயர் போன மடத்துவெளி முருகன் கோவிலின் சிறந்த பணியாளர்.மக வித்தியாலயத்தில் சங்கீதத்தை முறைப்படி கற்ற ஞான சேகரம் தனது குழுவினரோடு அன்னைப்பத்து அச்சோப்  பதிகம்,நமச்சிவாயப் பதிகம் ,பஜனை நாமாவளிகள் ,திருப்புகழ் ,பஞ்ச புராணம் என்  எல்லாவற்றுக்கும் சல்லாரி சப்லா கட்டை  என்பவற்றை ஒவ்வொரு விதமாக தாளமிட வைத்து கூட்டு பிரார்த்தனை செய்கின்ற காட்சியே அலாதியானது .  பாணாவிடை சிவன் கோவில் .பெருங்காடு முத்து மாரியம்மன் கோவில் என்பவற்றின் திருவிழா காலங்களிலும் அவற்றில் பங்கேற்றி மெருகூட்டுவார்.  மடத்து வெளி முருகன் கோவில் திருவெம்பாவை காலங்கள் பக்தி மார்க்கத்துக்கு முத்திரை பதித்தவை .அதிகாலையில் எழுந்து நீராடி இவரது வழிகாட்டியான முதல்வர் திரு க.அம்ப்லாவனருடன் இணைந்து ஆலயம் சென்று திருப்பள்ளி எழுச்சி  அருளி பின்னர் கிராமந்தோறும் சங்கு சேமக்கல வீதி வல ஓதல் செய்து மீண்டும் ஆலயத்தில் திருவெம்பாவை விழாவை முடித்து வைக்கும் பணிகளில் முழுமையாக ஈடு அப்டுத்திகொண்டவர் .சுவில் கூட இவர் எல்லா ஆலயங்களிலும் இதே பணியை புரிந்து வருகின்றார் .முக்கியமாக இவர் திருவில காலத்தில் ஊஞ்சல் பாடல்களை நாதஸ்வர இசைக்கு இணையாக  பாடுவது பக்தர்களை பரவசப் படுத்தும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக