ஞாயிறு, 2 அக்டோபர், 2011

வல்லிபுரம் நல்லையா (இராமச்சந்திரன்)
------------------------------------------------------ 
புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாக  கொண்டமடத்துவெளி பிரபல வர்த்தகர் வல்லிபுரம் (தங்கம்மா ) அவர்
களின் புத்திரனான  இராமச்சந்திரன் கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றபின்னர் சிறிது காலம் சொந்த ஊரிலேயே வர்த்தக்கதில் ஈடுபட்டு பின்னர் புங்குட்தீவு கிராமசபை வரி அறவீட்டு உத்தியோக்கதராக பணியாற்றினார் .இளமைக்காலத்தில் இருந்தே சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இராமச்சந்திரன் கட்டிடக் களைய சுயமாக கற்று தனது வியாபார நிறுவனத்தை சொந்தமாக நிர்மாணித்து சந்திரகிரி என் நாமம்  இட்டு மகிழ்ந்தார் .ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு மடத்து வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தில் பங்கு பற்றி பல ஆண்டுகளாக அந்த ஆலயத்தின் தொண்டில் தன்னை அர்ப்பணித்தார் அத்தோடு கடற்கரை தூண்டி ஞான வைரவர் ஆலயதையும்மிகுந்த சிரமத்தின் மத்தியில் கட்டி கும்பாபிசேகம் செய்து வைத்தார் .இந்த ஆலயத்தில் வருடந்தோறும் சித்திரை கஞ்ச ஊற்றும் சிறப்பான விழாவினை சித்திரா பௌர்ணமியில் நடாத்தி வந்தார் .வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த ஒரு நாள் தைப்பொங்கல் விழாவிலும் இவரது பாரிய பங்களிப்பு இருந்து வந்தது .எல்லாவற்றுக்கும் மேலாக அறுபதுகளின் பின்பகுதியில் தமிழனத்தின் தேசிய அடையாளமாக திகழ்ந்த தமிழரசுக் கட்சியின் பிராந்திய அமைப்பாளராக பொறுப்பேற்று அந்த கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட்டர்.எழுபது தேர்தலில் இவரது உழைப்பு இந்த பகுதியில் தமிழரசுக் கட்சிக்கு பாரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது .இந்த தேர்தலுக்கு முதல் நாளில் நடைபெற்ற பெருங்காடு முதல் வேலணை மத்திய கல்லூரி வரையிலான சிறப்பான வாகன பேரணியின் ஏற்பாட்டுக்கு க.திருநாவுக்கரசு ,சந்திரன் சிவநாமம் போன்றோருடன் இணைந்து ஒழுங்கு படுத்திய முறை பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது .கமலம்பிகைபலைய மாணவர் சங்கத்தினதும் ஆரம்ப கர்த்தாக்களில் ஐவரும் ஒருவர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக