ஞாயிறு, 2 அக்டோபர், 2011

வானதி தேசிங்குராஜா


கலாநிதி வானதி தேசிங்குராஜா 
-----------------------------------------------
ஜெர்மனி டில்லன்பேர்க் நகரில் வசித்து வரும் திருமதி வானதி அவர்கள் ஐரோப்பாவின் சிறந்த பிரபல நடன ஆசிரியை ஆவார் .யாழ்ப்பாணத்தில் பிரபலமான புகைப்படக் கலைஞர் இலங்கேஸ்வரனின் புத்திரியான இவர் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் புங்குட்தீவை புகுந்த இடமாகவும் கொண்டவர்.தனது உயர்கல்வியோடு நடனத்தை முறைப்படி யாழ்ப்பணத்தில் பிரபல நடனதாரகை திருமதி லீலா ஆறுமுகையா (நாராயணன் )அவர்களிடம் கற்று தேறிய பின் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்07. 05.1977 இல்தனது அரங்கேற்றத்தை  வெகுசிறப்பாக நடத்தினார் .தொடர்ந்து பல நடனப்பள்ளியை  நடத்திய பின்னர்09. 02.1983இல் .புங்குடுதீவு நாலாம் வட்டரம வேலாயுதம் தேசிங்குராஜாவை மணமுடித்து ஜே ர்மனிக்கு 1984இல் புலம்பெயர்ந்தார் .ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்த வானதி வானதி நர்த்தனாலயத்தை ஆரம்பித்து பல நகரங்களிலும் சிரமப்பட்டு பயணம் செய்து கற்பித்து வந்தார் .தனது ஒரே மகளான தமிளிநியையும் தனது வழியிலேயே வழிகாட்டி அவரையும் ஒன்பதாவது வயதில் அரங்கேற்றம் காண வைத்தார் .தற்போது வெள்ளிவிழ கண்டு பல மாணவர்களை நடனதர்ர கைகளாககி ஆலமரமாய் விரிந்து விழுதோடி நிற்கிறது இவரது நர்த்தனாலயம் 2011இல் இவரது வெள்ளி விழாவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது.தாயக விடுதலை சம்பந்தமான விழாக்களுக்கு   எந்த வித எதிர்பர்ப்பும்  இ ல்லாமல் தனது நடன நிகழ்ச்சிகளை வழங்கி எமது மண்ணுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.ஜெர்மனி மட்டுமல்லாது ஐரோப்பா கனடா  போன்ற நாடுகளிலும் தனது ஆழ்ந்த திறமை வெளிப்பாடுகளை காட்டி வருகிறார்.குறிப்பாக சுவிஸ் புங்குட்தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் வேரும் விழுதும் விழாவில் இவரது நர்த்தகிகளின் நாட்டிய  வித்தகம் மக்களை கிறுகிறுக்க வைத்தது .இதுவரை 52 மாணவிகளை அரங்கேற்றம் ஏற வைத்து சாதனை படைத்து தலை நிமிர்ந்து நிற்கிறார் இந்த நடனமாது .இவருக்கு கிடைத்த விருதுகள் 


  -1979-நாட்டிய  தாரகை -வீரசிங்கம் மண்டபம் .யாழ் தொலைதொடர்பு    ஸ்தாபனம்
-13 -10௦-1996-நாட்டிய  ஆச்சார்யாமணி -வானதி நர்தானால்ய 10வது ஆண்டு விழ -சீர்காழி சி  வசிதம்பரம் 
-11-07-1998-ஈழத்தேசியவாணி -லண்டன் நாடியாலயம் அதிபர்.ராகினி ராஜகோபால் 
-24-03-2001கலைசுடர் -வானதி நர்தானாலயம் 15வது ஆண்டு விழா  லீலா அறுமுகையா
-15-12-2001-நிருத்தனகளைமாமணி  சர்வதேச இந்து மத சங்கம் 
-02-03-2002பரதமாதேவி - கவிஞர் கந்தவனம் 
-21-072002-கனேடிய அரச விருது-கனடா அரசு 
-27-5-202-கலை எழில் நர்ஹ்தகி-கனடா இளம் கலைஞர்  மன்றம்
-21-07-2002-நாட்டியக் கலாமணி -சர்வதேச இந்து மத குருபீடம் 
-2004---கௌரவ கலாநிதி .உலகப் பல்கலைக்கழகம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக