ஞாயிறு, 2 அக்டோபர், 2011

திருமதி ரோகினி கேதீஸ்வரன்

திருமதி  ரோகினி கேதீஸ்வரன் 

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தை
பிறப்பிடமாக கொண்ட சுப்பையா கணேசின் புத்திரியான ரோகினி கேதீஸ்வரனை கரம் பிடித்து தற்போது சுவிட்சர்லாந்து பேர்ன்       சுமிச்வால்டில் வாழ்ந்து வருகிறார் .ஆரம்பக் கல்வியை ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில்  ஆரம்பித்தவர் ஓராண்டின்   பின்னர்  யாழ்  வேம்படி  மகளிர்  கல்லூரியில் உயர்தரம் வரை கற்ற பின்னர் வட இலங்கை  சங்கீத சபை பரீட்சையில் வாய்ப்பாட்டு சங்கீத பிரிவில் தேர்ச்சி பெற்று உயர்ந்தார்.இதனை தொடர்ந்து யாழ் இராமநாதன் நுண்கலை கல்லூரியில் தனது படிப்பை மேற்கொண்டார் .இவர் பிரபல சங்கீத வித்துவான் பத்மலிங்கம் ஆவர்களிடம் முறைப்படி  சங்கீதத்தை கற்ற பின்னர் எமது மண்ணின் மூத்த கலைஞர்  . பிரபல சங்கீத பூசணம்  பொன்-சுந்தரலிங்கத்திடம்  கற்று தேறிய இவர் தனது கலை ஞானத்தை மட்டவர்களுக்கும்அறிய வைக்கு உயரிய நோக்கில்   சங்கீத வகுப்புகளை நடத்தி ஏராளமான மாணவர்களை சங்கீதத்தில் சிறந்தோங்க வழி செய்துள்ளார் சுவிஸ் லங்கந்தால் நகரில் சாயி மதுர கலை மன்றம் என்ற பாடசாலையை ஆரம்பித்து இங்கே மாணவர்களுக்கு பயிர்டுவிது வருகிறார் .இவரது புதல்வி சைந்தவி கூட இவரது மாணவி யாக பயின்று 2009இல் நடைபெற்ற இசைக்குயில் என்ற மாபெரும் விருதை வெல்ல காரணமாக இருந்தவர் என்பது குறிபிடத்தக்கது. மேலும் இவரது மாணவர்கள் பலரும் பலவகையான போட்டிகளில் பங்கு பற்றி ஏராளமான விருதுகளையும் சாதனைகளையும் பெற்று வருவது இவருக்கு பெருமை சேர்க்கும் விடயம் அஆகும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக