வியாழன், 1 மார்ச், 2012


திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி

திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி 

புங்குடுதீவு ஒன்பதாம் வட்டா

ரத்தை சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி தனது ஆரம்பக் கலவியை சண்முகநாதன் வித்தியாலயத்திலும்  உயர்கல்வியை மகா வித்தியாலயத்திலும் முடித்துக் கொண்டுசர்வோதயம், புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவு சங்கம என்பவற்றில்  பணியாற்றி விட்டு எண்பதுகளின் இறுதியில் சுவிசுக்கு புலம்பெயர்ந்து ஜெனீவ மாநகரில் வாழ்ந்து வருகிறார் . புங்குடுதீவு.2  செல்லையா சந்திரபாலனை கரம்பிடித்து வாழ்ந்து வருமிவர் ஜெனீவா  நகரில் தமிழ் சிறார்களுக்கு தமிழ் மொழி .நுண்கலைகள் என்பவற்றை போதிக்கும் எண்ணத்தோடு 1997இல் ஜெனீவா தமிழ் கலைகலாசார சங்கத்தை  ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வருகின்றார்.இந்த மன்றத்தின் மூலம் ஏராளமான மாணவர்கள் மொழியைக் கற்பதோடு இசை நடன கல்விகளையும் கற்று தேறி வருகின்றனர் .இந்த கல்வி கூடத்தில் தமிழ் சங்கீதம்உட்பட  வயலின்,கிட்டார் .கீபோட் போன்ற வாத்திய வகுப்ப்புகளையும்நடத்தி வருகிறார்  இந்த மாணாக்கர்களின் திறமையை வெளிக்கொனரவென ஈராண்டு  தோறும் இந்த மன்றத்தின் மூலம்கலை  விழாவினையும் நடத்தி வருகின்றார் வருடந்தோறும் வாணி விழாவினையும் இந்த கலைக்கூடம் மூலம் செய்து வருகிறார் இந்த பாடசாலை மாணவர்கள் இசைக்குயில் நட்டியமையில் உட்பட ஏராளமான போட்டிகளும் பல்வேறு கலை நிகழ்சிகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி விருதுகளையும் வென்று வருகிறார்கள் .திருமதி ராஜேஸ்வரி தனது தளராத முயட்சியினாலும் திட்டமிட்டு செயல்படும் தன்மையாலும் ஜெனீவா மாநகரின் ஒரு சிறந்த சமூக சேவகியாக தமிழ் மாதர் குலத்திடையே ஒளிவீசுகிறார் .இவருக்கு உறுதுணையாக இவரது கணவரும் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.இவரது கணவரும் புங்குடுதீவுக்காக பல அரிய பணிகளை செய்து வருகின்றார்.பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மீள் புனரமைப்புபநிகளை அருமையாக செய்து முடித்த கையோடு இப்போது கந்தசாமி ஆலயத்தின் ராஜகோபுர நிர்மநிப்பில் தன்னை அர்ப்பணித்துள்ளார் 

வியாழன், 6 அக்டோபர், 2011

 vanathi thesungurajah
 kamal - ravindran
 thankarasa (mathi)
 sathuja prasanna (ponnaadai porthu kaouravikkapadupavar ) valam
 srithas


 selvakumar  kones


புதன், 5 அக்டோபர், 2011

மானா வெள்ளை ,
வல்லன் ,சந்தையடி நுணுக்கள் குறிகட்டுவான் போன்ற இடங்களில் பந்தாடினார்.மேட்குரிபிட்ட கழகங்கள் எல்லாமே சில காலங்களில் தாச்சி என்னும் கிளித்தட்டு விளையாட்டையும் விளையாடி வருவார்கள் .மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் அவ்வப்போது கிரிக்கெட்டும் விளையாடி  வந்திருகிறார்கள் , எமது ஊரில் பல சுதேச விளையாட்டுக்களும் மக்கள் விளையாடி வந்துள்ளனர் .கிட்டி அடித்தல் ,தாச்சி,மாபிள் அடித்தல் ,போன்றவைஅவை . எமது ஊரில் நிறைய குளங்கள் ,கடற்கரைகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள்  நீச்சலில் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர் . இனி தனிப்பட்ட ரீதியில் நிறைய வீரர்கள் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளனர் . முக்கியமாக சி.தனபாலசுந்தரம்(ஒட்ட்டம் -வடமாகான  முதல் இடம்--அகில இலங்கை இரண்டாம் இடம் ),சதானந்தன் (குண்டெறிதல் .வடமாகாண முதலாம் இடம் ),இன்னும் வி.லோகநாதன் (சிவா)-குண்டு, கனகராசன் .புங்குட்தீவு 2(ஓட்டம் )   கைலைவாசன் (மரதன்)என்போரும்  இடம் பிடிகிர்ரர்கள் .

madathuveli sanasamooka nilaiyam

மடத்துவெளி

சிவராசா ஸ்ரீ சஜிதா
(நாடு கடந்த தமிழீழ அரசு பாராளுமன்ற உறுப்பினர் )

ஸ்ரீ சஜிதா புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட வீரகத்தி சிவராசாவின் புதல்வியாவார் .சுவிட்சர்லாந்த் செங்காலன் நகரில் வசித்து வரும் இவர் தனது உயர்கல்வியை கற்றுக்கொண்டு தமிழினத்தின் விடுதைலைக்காக ஏராளமான செயலபாடுகளில்  தன்னை அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார் .இளைஞர் அமைப்பில் இணைந்து  எமது இனத்தின் விடிவுக்காக பல திட்டங்களை முறைப்படி ஒழுங்கு படுத்தி செயலாக்கி வருகிறார்.தமிழ் ஜெர்மன் பிரஞ்சு ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரிச்சயமான ஸ்ரீ சஜிதா மிக இளம் வயதிலே சமூக இன மொழி சேவை புரிய வந்திருப்பது பாராட்டுக்குரியதே .இளம் தலை முறைக்கு முன்னுதாரணமாக திகழும் இவர் கடந்த மார்ச் மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சங்க கூட்டத்தில் தமிழரின் விடிவுக்காய் ஆங்கில மொழியில் ஓங்கி ஒலித்த காட்சி எல்லா ஊடகங்களையும் அலங்கரித்தது  நினைவிருக்கும் .

புங்குடுதீவில் விளையாட்டு துறை


புங்குடுதீவில்  விளையாட்டு  துறை 
------------------------------------------------
சகல துறைகளிலும் சிறந்து விளங்கும் புங்குடுதீவு மண் விளையாடு துறையை கூட விட்டு வைக்கவில்லை .அந்த துறை சம்பந்தமாக ஓரளவு சொல்லும் விதமாக இந்த கட்டுரை   அ மைகின்றது  .புங்குட்தீவில் விளையாட்டு என்றதும் முதலி சொல்ல வேண்டிய ஒரு அமைப்பு சிவலைபிட்டி சன சமூக நிலையம் தான் என்பதில் யாரும் குறை சொல்ல மாடார்கள் .வருட பிரப்பென்ர்டஹு இந்த நிலையம் நடத்தும் சைக்கிலோட்ட போட்டி  மற்று மரதன் உட்பட்ட விளையாட்டு போட்டிகளின் நல என்பது எள்ளல புங்குடுதீவு மக்களுக்கும் நினைவுக்கு வரும் .சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த நாளில் இடைவிடாது கோலாகலமாக மாபெரும் விழாவாக இதனை நடத்தி வந்தவர்கள் சிவலைபிட்டி ச.ச.நிலையத்தினர் .   35மைல் சைக்கிலோட்ட போட்டி ௧௦10மைல் மரதனோட்டம் பெண்களுக்கான இதே போட்டிகள் மாட்டு வண்டி சவாரி போட்டி கரப்பந்தாட்டபோட்டிகள் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் என பகல் முழுவதும் நடத்தி இரவில் பரிசளிப்பு விழ நடத்தும் சிறப்பு பாராட்டப் பட வேண்டியது .நுணுக்க ல் வெளியில் இவர்கள் நடத்தும் மாடு வண்டி சவாரி போட்டிக்கென வட மாகாணம் முழுவதும் இருந்து வீரர்கள் வந்திருப்பார்கள் 
இந்த நிலையத்தினர் தினமும் மாலை வேளையில் கரப்பந்தாட்டம் ஆடுவது ஒரு அறிய உடற்ற்பயித்ர்ச்சி  முறையாகும் .இன்னும்சொல்ல போனால்  களம்  இவர்கள் இப்போது நாம் காணும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளை போல சுற்றுப்போட்டிகள் லீக் முறை போட்டிகளை அப்போதே  அங்கெ நடத்தி கட்டிய வரலாறு படைத்திருகிறார்கள்.இவர்களது மைதானத்தில் வேறு கழகங்கள் வந்து விளையாடுவதும் இவர்கள் அங்கெல்லாம் போய் ஆடுவதுமாக இருந்த இந்த முறை இபோதைய மேற்கு நாட்டவ்ரின்முறை தானே .இவர்கள் சென்று ஆடியதும் அழைத்து ஆடியதுமான முக்கிய கழகங்கள் கரம்பொன் ,.பருத்தியடைப்பு, தம்பாட்டி ,வேலணை , வேலனைத்துறை ,உடுப்பிட்டி இமையாணன் ,கரவெட்டி, அச்சுவேலி என்ற வரிசையில் சொல்லி கொண்டே போகலாம் .பல சுற்று போட்டிகளில் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்கள் வீரர்க  ள் வரிசையில் சிவலிங்கம் (அம்மான் ),சின்னராச தங்கராசா ,பிள்ளை நாயகம் , சண்முகலிங்கம், ஸ்ரீதரன் ,தயாபரன் பாலசுப்ரமணியம், அருள் போன்றோரும் சிறந்து விளங்கினார்கள் .சைக்கிலோட்ட போட்டிகளில்ரஞ்சன்  ,மகான் ,கேதான் ,செல்வேந்திர ராசா   போன்ற வீர்களும் பெண்கள் வரிசையில் கௌசல்யா, உதயா போன்ற வீராங்கனைகளும் புகழ் பெற்று விளங்கினார்கள் .
இவர்களை போன்றே தைப்பொங்கல்  நாளில் இருபிட்டி சன சமூக நிலையத்தினர் சைக்கிலோட்ட போட்டிகளை மற்றும் கரப்பந்தாட போட்டிகளை நடத்தி மகிழ்வித்தார்கள் .இவர்களும் சங்கரதாஸ் போன்ற சிறந்த வீரகளை கொண்டு அணி அமைத்து இருந்தார்கள் .அடுத்து மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் புங்குடுதீவில் சிறந்த விளையாட்டுத்துறையை வளர்த்தெடுத்தனர். இவர்களும் மாலை neரத்தில் கரப்பந்தாட்டம் உதபந்தாட்டம் என இரண்டிலும் சிறந்து விளங்கினார்கள் .எண்பதுகளின் ஆரம்பத்தில் தீவுப்பகுதியிலே சிறந்த உதைபந்தாட்டக் கழகமாக தெரிவாகி இருந்தது குறிப்பிடத் தக்கது மேலும் நாசரேத் உதைபந்தாட்டக் கழகம் அண்மையில் தீவுப்பகுதி சாம்பியனாகி வடமகனதிலும் பல சாதனைகளை படைத்துள்ளது .புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் உதைபந்தாட்ட அணியும் வலைபந்தட்ட பெண்கள் அணியும் உன்னத சாதனைகளை செய்துள்ளது மேட்குரிபிட்ட கழகங்கள் எல்லாமே சில காலங்களில் தாச்சி என்னும் கிளித்தட்டு விளையாட்டையும் விளையாடி வருவார்கள் .மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் அவ்வப்போது கிரிக்கெட்டும் விளையாடி  வந்திருகிறார்கள் , எமது ஊரில் பல சுதேச விளையாட்டுக்களும் மக்கள் விளையாடி வந்துள்ளனர் .கிட்டி அடித்தல் ,தாச்சி,மாபிள் அடித்தல் ,போன்றவைஅவை . எமது ஊரில் நிறைய குளங்கள் ,கடற்கரைகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள்  நீச்சலில் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர் . இனி தனிப்பட்ட ரீதியில் நிறைய வீரர்கள் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளனர் . முக்கியமாக சி.தனபாலசுந்தரம்(ஒட்ட்டம் -வடமாகான  முதல் இடம்--அகில இலங்கை இரண்டாம் இடம் ),சதானந்தன் (குண்டெறிதல் .வடமாகாண முதலாம் இடம் ),இன்னும் வி.லோகநாதன் (சிவா)-குண்டு, கனகராசன் .புங்குட்தீவு 2(ஓட்டம் )   கைலைவாசன் (மரதன்)என்போரும்  இடம் பிடிகிர்ரர்கள் .

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

கணபதிபிள்ளை புண்ணிய மூர்த்தி

அமரர் கணபதிபிள்ளை புண்ணிய மூர்த்தி 

கொழும்பு மாநகரில் பிரபலமான பொலிஸ்
அதிகாரி புண்ணிய மூர்த்தி மோட்டார் சைக்கிள் விபத்தில் காலமானார் என்ற செய்தி புங்குட்தீவை மட்டும் அல்ல அகில இலங்கையையுமே உலுப்பி எடுத்தது எழுபதுகளில் ஒரு நாளில்.புங்குட்தீவு எட்டம் வட்டாரத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி கமலாம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்ற பின்னர் உயர்கல்வியை மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்து தொழில் கல்வியை காவல் துறை பாடசாலையிலும் கற்று சாதாரண காவல்துறை  உத்தியோக்கதரானர் .சில ஆண்டுகளிலேயே இவரது தொழில் திறமை வல்லமை ஆளுமை வீர சாகசங்கள  உயர் பதவிக்கு அழைத்துச் சென்றது .அந்த வகையில் காவல்துறை பொறுப்பதிகாரியாக கணபதிபிள்ளை புண்ணிய மூர்த்தி பதவி உயர்ந்தார்.இவரது சொந்த மைத்துனி விக்க்னேஸ்வரியை நிச்சயம் செய்ய எண்ணி இருந்த வேளையில் ஒரு இரவு தொடங்கும் வேளையில் இவர் ஒட்டி சென்ற மோட்டர் சைக்கிள்  (ஈ ரூந்துமோட்டார்  ) வெள்ளவத்தை பகுதியில்

கட்டுப்பட்டஈழந்து ஒரு தந்திகம்ப்பதுடன் மோதுண்ட பொது இவர் ஸ்தலத்திலேயே காலமானார் .இவரது நிச்சயிக்கப்பட்ட மத்துநியானவர் இவரது சகோதரன் லட்சுமணனை மனது தற்போது ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார் .புங்குடுதீவு மடத்துவெளி மண்ணுக்கு கிடைத்த அற்புதமான காவல்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் புண்ணியமூர்த்தி இப்போது எம்மிடம் இல்லை 
கதிர்காமு  சண்முகராசா (சண் .ரவி )
-----------------------------------
இன்றைய இணைய உலகின்
நவீனத்துவத்தின் கதாநாயகர்களில் இ வரும் ஒருவர் தமிழ் ஊடகங்களில் கோலோச்சும் இணைய வரிசையில் முன்வரிசை இடம் எடுத்துள்ள எமது தாய் மண்ணின் படைப்பாளியின் கைவண்ணம் மை கதிரவன் எனபது எல்லோரும் அறிந்ததே .ஆமாம் .புங்குட்தீவு3 ஆம் வட்டாரத்தை சேர்ந்தகதிர்காமு சண்முகராசா சுப்பிரமணிய வித்தியாலயத்தில் ஆரம்பக் கலவியையும் உயர்கல்வியை மக வித்தியலயதிலும் கற்று எண்பதுகளின் பின்பகுதியில் சுவிட்சர்லாந்துக்கு புலம் பெயர்ந்தார் .இளைஞனாக வந்த சண்முகராசா தனது தாயாக விடுதலை போருக்கான பங்கை செலுத்தும் எண்ணத்துடன் அந்த செயல்பாடுகளில் தன்னை இணைத்து கொண்டார்.நீண்ட காலமாக தாயாக பணிகளில் ஈடுபாடு கொண்ட சண்-ரவி
காப்புறுதி வங்கி செயல்பாடுகளை கற்றுதேறி தனியே அவை சம்பந்தமான நிறுவனம் ஒன்றை நிறுவி  செயல் படுத்தி வருகிறார்.பின்னாளில் நவீன ஊடகத்துறையான இணையதளத்தின் உன்னத உயர்ந்த பரந்த செயல்பாட்டின் உச்ச பலன் பற்றி விளங்கி கொண்டவராக அதன் பால் ஈர்க்கப்பட்டு தமிழினத்துக்கு செய்கின்ற ஒரு சேவையாக எமது இனத்தை எழுச்சி கொள்ள வைக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தும் நல நோக்கில் மை கதிரவன் என்ற இணையத்தை ஆரம்பித்தார் .ஆரம்பத்தில் சிறியதாக ஆரம்பித்து  பின் தேவை கருதி ஜனரஞ்சகமான ஒரு பாரிய இணைய தளமாக அதனை உருவாக்கி வெற்றி நடை போட்டு வருகிறார் .தமிழனுக்கு தேவையான அத்தனை அம்சங்களை ஒருமித்து உள்ளடக்கிய ஒரு தளமாக மாற்றி புரட்சி செய்துள்ளார் சண்-ரவி அவர்கள் .எந்த வித வர்த்தக நோக்கமும் இன்றி சாதரணமாக  நடத்தி வருகின்ற இந்த இணையதளத்தின் பார்வையாளர்களின் தொகை நாளுக்கு நாள் பெருகி வருவது இவரது உழைப்புக்கு கிடைத்த உன்னத பலனாகும்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் செயல் பாடுகளிலும்  கணிசமான பங்களிப்பை  செ ய்து வருகிறார் சண்-ரவி  www. mykathiravan  .com    
சண்முகலிங்கம்  சாயி 

புங்குடுதீவு 12ஆம் வட்டரைத்த
சேர்ந்த பிரபல சங்கீத வித்துவான் ஆசிரிய சண்முகலிங்கத்தின் புத்திரனான சாயி  அவர்கள் எண்பதுகளின் ஆரம்பத்தில் சுவிசுக்கு புலம் பெயர்ந்துள்ளார் .இவர் சுவிட்சர்லாந்தில் கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார் .முக்கியமாக நாடகத்துறையில் தனது பலதரப்பட்ட நடிப்பாற்றலால் மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார் .புங்கையூர் எஸ் ரமணனின் அல்ப்ஸ் அரங்காடிகள் மற்றும் சு வி கலைக்கூடம் என்பவற்றின் நாடகங்கள் அனைத்திலும் நடித்து உள்ளார் .பெண் வேடமிட்டு மேடையில் புகுந்தால் ரசிகர்களை கொள்ளை கொள்ளுமஇவரது நடிப்பு இவருடைய முத்திரையாகும் 
 இக்கு அக்கு பச்சை ,வீடில வில்லங்கம் ,என் ஏராளமான ரமணனின் இயக்கத்தில் உருவான நாடகங்கள் அனைத்திலு இவருக்கு ஒரு  முக்கிய பாத்திரம் இருக்கும்  .அந்த ஆல மரத்தடியில் என்ற நாடகத்தில் இவர் ஏற்ற அருந்தவம் பாத்திரத்தில் புங்குட்தீவு க்கு செல்லும் வெளிநாட்டு மோகம் கொண்ட ஒரு இளைஞனின் துடிப்பு அப்படியே அச்சொட்டாக பொருந்தியது எனலாம்.மேடையில் இவர் தோன்றும் ஒவ்வெரு காட்சியும் ரசிகர்களை  சிரிப்பில்  குலுங்க வைக்கும் அற்புதங்கள் .எந்த ஒரு பாத்திரத்தை கொடுத்தாலும் யதார்த்தமாக பத்திரமாகவே மாறிவிடும் தன்மை கொண்டவர். அந்த ஆல மரத்தடியில் நாடகத்தில் இவர் வழமைக்கு மாறாக சில காட்சிகளில் சோகமாக நடிக்கும் விதமாக அமைக்கப்டடிருந்த போதும் அதையும் இவர் ஒரு கை பார்த்து மக்களை கவர்ந்திருந்தார் 

புஷ்பா தர்மலிங்கம்


 பின்வரிசையில் இருப்பவர்களில் தர்மபலனுக்கு அடுத்து இடம் இருந்து மூன்றவதாக இருப்பவர் புஷ்பா 

வானதி தேசிங்குராஜா


கலாநிதி வானதி தேசிங்குராஜா 
-----------------------------------------------
ஜெர்மனி டில்லன்பேர்க் நகரில் வசித்து வரும் திருமதி வானதி அவர்கள் ஐரோப்பாவின் சிறந்த பிரபல நடன ஆசிரியை ஆவார் .யாழ்ப்பாணத்தில் பிரபலமான புகைப்படக் கலைஞர் இலங்கேஸ்வரனின் புத்திரியான இவர் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் புங்குட்தீவை புகுந்த இடமாகவும் கொண்டவர்.தனது உயர்கல்வியோடு நடனத்தை முறைப்படி யாழ்ப்பணத்தில் பிரபல நடனதாரகை திருமதி லீலா ஆறுமுகையா (நாராயணன் )அவர்களிடம் கற்று தேறிய பின் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்07. 05.1977 இல்தனது அரங்கேற்றத்தை  வெகுசிறப்பாக நடத்தினார் .தொடர்ந்து பல நடனப்பள்ளியை  நடத்திய பின்னர்09. 02.1983இல் .புங்குடுதீவு நாலாம் வட்டரம வேலாயுதம் தேசிங்குராஜாவை மணமுடித்து ஜே ர்மனிக்கு 1984இல் புலம்பெயர்ந்தார் .ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்த வானதி வானதி நர்த்தனாலயத்தை ஆரம்பித்து பல நகரங்களிலும் சிரமப்பட்டு பயணம் செய்து கற்பித்து வந்தார் .தனது ஒரே மகளான தமிளிநியையும் தனது வழியிலேயே வழிகாட்டி அவரையும் ஒன்பதாவது வயதில் அரங்கேற்றம் காண வைத்தார் .தற்போது வெள்ளிவிழ கண்டு பல மாணவர்களை நடனதர்ர கைகளாககி ஆலமரமாய் விரிந்து விழுதோடி நிற்கிறது இவரது நர்த்தனாலயம் 2011இல் இவரது வெள்ளி விழாவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது.தாயக விடுதலை சம்பந்தமான விழாக்களுக்கு   எந்த வித எதிர்பர்ப்பும்  இ ல்லாமல் தனது நடன நிகழ்ச்சிகளை வழங்கி எமது மண்ணுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.ஜெர்மனி மட்டுமல்லாது ஐரோப்பா கனடா  போன்ற நாடுகளிலும் தனது ஆழ்ந்த திறமை வெளிப்பாடுகளை காட்டி வருகிறார்.குறிப்பாக சுவிஸ் புங்குட்தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் வேரும் விழுதும் விழாவில் இவரது நர்த்தகிகளின் நாட்டிய  வித்தகம் மக்களை கிறுகிறுக்க வைத்தது .இதுவரை 52 மாணவிகளை அரங்கேற்றம் ஏற வைத்து சாதனை படைத்து தலை நிமிர்ந்து நிற்கிறார் இந்த நடனமாது .இவருக்கு கிடைத்த விருதுகள் 


  -1979-நாட்டிய  தாரகை -வீரசிங்கம் மண்டபம் .யாழ் தொலைதொடர்பு    ஸ்தாபனம்
-13 -10௦-1996-நாட்டிய  ஆச்சார்யாமணி -வானதி நர்தானால்ய 10வது ஆண்டு விழ -சீர்காழி சி  வசிதம்பரம் 
-11-07-1998-ஈழத்தேசியவாணி -லண்டன் நாடியாலயம் அதிபர்.ராகினி ராஜகோபால் 
-24-03-2001கலைசுடர் -வானதி நர்தானாலயம் 15வது ஆண்டு விழா  லீலா அறுமுகையா
-15-12-2001-நிருத்தனகளைமாமணி  சர்வதேச இந்து மத சங்கம் 
-02-03-2002பரதமாதேவி - கவிஞர் கந்தவனம் 
-21-072002-கனேடிய அரச விருது-கனடா அரசு 
-27-5-202-கலை எழில் நர்ஹ்தகி-கனடா இளம் கலைஞர்  மன்றம்
-21-07-2002-நாட்டியக் கலாமணி -சர்வதேச இந்து மத குருபீடம் 
-2004---கௌரவ கலாநிதி .உலகப் பல்கலைக்கழகம்  
வல்லிபுரம் நல்லையா (இராமச்சந்திரன்)
------------------------------------------------------ 
புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாக  கொண்டமடத்துவெளி பிரபல வர்த்தகர் வல்லிபுரம் (தங்கம்மா ) அவர்
களின் புத்திரனான  இராமச்சந்திரன் கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றபின்னர் சிறிது காலம் சொந்த ஊரிலேயே வர்த்தக்கதில் ஈடுபட்டு பின்னர் புங்குட்தீவு கிராமசபை வரி அறவீட்டு உத்தியோக்கதராக பணியாற்றினார் .இளமைக்காலத்தில் இருந்தே சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இராமச்சந்திரன் கட்டிடக் களைய சுயமாக கற்று தனது வியாபார நிறுவனத்தை சொந்தமாக நிர்மாணித்து சந்திரகிரி என் நாமம்  இட்டு மகிழ்ந்தார் .ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு மடத்து வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தில் பங்கு பற்றி பல ஆண்டுகளாக அந்த ஆலயத்தின் தொண்டில் தன்னை அர்ப்பணித்தார் அத்தோடு கடற்கரை தூண்டி ஞான வைரவர் ஆலயதையும்மிகுந்த சிரமத்தின் மத்தியில் கட்டி கும்பாபிசேகம் செய்து வைத்தார் .இந்த ஆலயத்தில் வருடந்தோறும் சித்திரை கஞ்ச ஊற்றும் சிறப்பான விழாவினை சித்திரா பௌர்ணமியில் நடாத்தி வந்தார் .வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த ஒரு நாள் தைப்பொங்கல் விழாவிலும் இவரது பாரிய பங்களிப்பு இருந்து வந்தது .எல்லாவற்றுக்கும் மேலாக அறுபதுகளின் பின்பகுதியில் தமிழனத்தின் தேசிய அடையாளமாக திகழ்ந்த தமிழரசுக் கட்சியின் பிராந்திய அமைப்பாளராக பொறுப்பேற்று அந்த கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட்டர்.எழுபது தேர்தலில் இவரது உழைப்பு இந்த பகுதியில் தமிழரசுக் கட்சிக்கு பாரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது .இந்த தேர்தலுக்கு முதல் நாளில் நடைபெற்ற பெருங்காடு முதல் வேலணை மத்திய கல்லூரி வரையிலான சிறப்பான வாகன பேரணியின் ஏற்பாட்டுக்கு க.திருநாவுக்கரசு ,சந்திரன் சிவநாமம் போன்றோருடன் இணைந்து ஒழுங்கு படுத்திய முறை பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது .கமலம்பிகைபலைய மாணவர் சங்கத்தினதும் ஆரம்ப கர்த்தாக்களில் ஐவரும் ஒருவர் .

எஸ் .சிவநேசன் (பிரசன்னா

எஸ் .சிவநேசன்  (பிரசன்னா ) 
புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தை
சேர்ந்த சிவநேசன் சுப்பிரமணிய வித்தியாலயம் மகாவித்தியாலயம்  என்பவற்றி கல்வி கற்ற பின்னர் சிறிது காலம் பெருங்காடு சந்தியில் வர்த்தக நிறுவனத்தை நடத்திய பின்னர்  சுவிசுக்கு புலம பெயர்ந்து செங் காலன் மாநிலத்தில் வசித்து வருகிறார்.சுவிசில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பிராந்திய பொறுப்பாளராக செயல் பட்டு வரும் சிவநேசன் புங்குடுதீவு மண்ணுக்கு சேவை செய்வதில் அலாதி பிரியம் கொண்டவர்.கூடுதல் நேரங்களில் தனது பிறந்த ஊர் பற்றியே  சிந்தித்து அதற்கான செயல் திட்டங்களை பற்றி பேசி வரும் இவர் சுவிசிலும் வர்த்தகத்தில் ஈடுபட் தொடங்கினார் .அவர் வசிக்கும்  பிரதேசத்தில் ஆசிய மளிகை நிறுவனத்தை திறம்பட நடத்தி வருகிறார். தாயக  உதவிகளை  வேண்டிய அளவுக்கு  செய்து உள்ளார். புங்குடுதீவில்  பிரபல சைக்கிலோட்ட வீராங்கனை உதயவினை மணமுடித்து  இனிதே வாழ்ந்து வருகிறார் 

1சத்தியநாதன் ரமணதாஸ்

சத்தியநாதன் ரமணதாஸ்
ஈழத்தின்  மாவட்டத்தின் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட ரமணன் தனது ஆரம்பக் கல்வியை சுப்பிரமானிய மகா

வித்தியாலயத்திலும் உயர்கல்வியை புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் கற்றார் .மிக இளம் வயதில் சுவிசுக்கு புலம் பெயர்ந்த இவர் மேலதிக கல்வியை சுவிசில் பெற்ற பின்னர் இசையில் நாட்டம் கொண்டு வயலின் இசைக்கருவியை முறைப்படி கற்று தேறினார் .பின்னர் கலைத்துறைக்குள் புகுந்து பல சாதனைகளை புரட்டி போட்டார் .நாடக கலையை அறிந்து தெரிந்து கொள்ள அவா கொண்டு புறப்பட்டவர் இன்று சுவிசில் மட்டுமல்ல ஐரோப்பா எங்கணும் சிறந்த நாடக வாதி என்ற முத்திரையை பதித்துள்ளார் .பழைய தமிழ் நாடக முறைமைகளை மாற்றி புரட்சி செய்தார்.மேற்கத்தைய நவீன நாடகவியலை முறைப்படி  கற்க ஆரம்பித்தார்,காட்சிப்படுத்தல் ,ஒப்பனை மேம்படுத்தல் ,மேடை அலங்காரம் ,எளிமையான வழிமுறைகள் ,பின்னணி இசைப்படுத்தல் .நவீன ஒளி அசைவு தோற்றுவாய் ,என் அத்தனை புதுமைகளையும் புகுத்தி தமிழ் நாடக உலகை மேம்படுத்தினார்.இவற்றுக்கு துணையாக நடக்க காவலர் தாசியஸ் அன்டன் பொன்ராஜ் பாஸ்கரன் போன்றோரை ஒருங்கிணைத்து நாடகப் பாசறைகளை ஏற்படுத்தினார் அங்கே  பல புதிய நடிகர்களை  உள்வாங்கி  பயிற்சி பட்டறைகளில் மெருகேற்றினார்.அத்தோடு நாட்டு கூத்து.ஓரங்க நாடகம் ,இசைவழி நாடகம் தெருவழி நாடகம் என பலவகை கலைப்படைப்புகளை பிரசவித்தார்.ஜெனீவ ஐ நா  சபை முன்றல்பேரணிகள்  போன்ற தாயக நிகழ்வுகளை தனது தமிழுணர்வு மிக்க படைப்புக்களால்  காலத்துக்கேற்ற கலை வெளிப்பாடுகளினால் எழுச்சிப் படுத்தினார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு  ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக நீண்ட  காலம் செயல் படும் ரமணன் அதன் நிகழ்வுகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்ற முன்னின்றவர் .ஒன்றியத்தின் மேடைகளிலும் பண்டாரவன்னியன் என்ற சரித்திர நாடகத்தையும் அந்த ஆல மரத்தடியில் என்ற இலட்சிய நாடகத்தையும் அரங்கேற்றினார்புங்கைய்யூர் எஸ் ரமணன் என்னும் புனைபெயரில் இவரது நாடகங்கள் ஏராளம்  ஐரோப்பா எங்கணும் மேடையேறி உள்ளன முக்கியமாக மேட் இன் ஸ்ரீலங்கா .இக்கு அக்கு பச்சை போன்றவை குறிப்பிடத்தக்கன.குறும்பட முழு திரைப்பட தயாரிப்பு  இயக்கம் நடிப்பு என்பவற்றிலும் உள் நுழைந்த ரமணன் பூப்பெய்தும் காலம் என்னும் சிறந்த திரைப்படத்தை உருவாக்கி இருந்தார் .இன்னும் தமிழக  திரைப்படமான அஜித்தின் அசல் என்ற படத்திலும் நடித்துள்ளார் .பல நடிகர்களை இவர் பட்டை தீட்டி உருவாக்கிய பெருமைக்குரியவர்.இவரது செவ்விகள் படைப்புகளை ஒலிபரப்பாத  ஒளிபரப்பாத  எழுதாத தொலக்காட்சிகள் வானொலிகள் ஊடகங்கள் இல்லை எனலாம்
இவர் நடித்து அல்லது இயக்கி மேடையேறிய படைப்புகள் 
நாடகங்கள் 
-------------------
மேட் இன் ஸ்ரீலங்கா 
சீர்கேடுகள் 
வீட்டில வில்லங்கம் 
இக்கு அக்கு பச்சை 
வெளிக்கிடடி மீனாட்சி 
பெத்தாலும் பெத்தேனடா 
நான் ஒரு கரப்பான் பூச்சி 
பண்டார  வன்னியன்   
அம்மையே அப்பா 
கடலம்மா 


மலையம்மா 
எரிமலை பூக்கள்
வில்லுப்பாட்டு
அந்த ஆல மரத்தடியிலே 
---------------------
புத்திமான் பலமாவான் 
சுவிஸ் திரைப்படம்
-------------------------- 
டாரியோ எம் 
மாட்லி இன் லவ் 
டெலிட்ராமா
--------------------
வணக்கம் 
சுவிஸ் தொலக்காட்சி விவரணப்படம் 
-----------------------------------------------------
இன்றைய ஈழம்  எஸ் எப் 1 தொலைக்காட்சி 


 நாட்டுக்கூத்துகள் 
வீரன் வில்லியம்ஸ் தெல்
காத்தவராயன் 

குறும்படங்கள் 
முடிவல்ல 
பூப்பெய்தும் காலம் 
தமிழக திரைப்படம் 
அசல் (நடிகர்)
மன்மதன் அம்பு (தொழில் நுட்பம் )

திருமதி ரோகினி கேதீஸ்வரன்

திருமதி  ரோகினி கேதீஸ்வரன் 

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தை
பிறப்பிடமாக கொண்ட சுப்பையா கணேசின் புத்திரியான ரோகினி கேதீஸ்வரனை கரம் பிடித்து தற்போது சுவிட்சர்லாந்து பேர்ன்       சுமிச்வால்டில் வாழ்ந்து வருகிறார் .ஆரம்பக் கல்வியை ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில்  ஆரம்பித்தவர் ஓராண்டின்   பின்னர்  யாழ்  வேம்படி  மகளிர்  கல்லூரியில் உயர்தரம் வரை கற்ற பின்னர் வட இலங்கை  சங்கீத சபை பரீட்சையில் வாய்ப்பாட்டு சங்கீத பிரிவில் தேர்ச்சி பெற்று உயர்ந்தார்.இதனை தொடர்ந்து யாழ் இராமநாதன் நுண்கலை கல்லூரியில் தனது படிப்பை மேற்கொண்டார் .இவர் பிரபல சங்கீத வித்துவான் பத்மலிங்கம் ஆவர்களிடம் முறைப்படி  சங்கீதத்தை கற்ற பின்னர் எமது மண்ணின் மூத்த கலைஞர்  . பிரபல சங்கீத பூசணம்  பொன்-சுந்தரலிங்கத்திடம்  கற்று தேறிய இவர் தனது கலை ஞானத்தை மட்டவர்களுக்கும்அறிய வைக்கு உயரிய நோக்கில்   சங்கீத வகுப்புகளை நடத்தி ஏராளமான மாணவர்களை சங்கீதத்தில் சிறந்தோங்க வழி செய்துள்ளார் சுவிஸ் லங்கந்தால் நகரில் சாயி மதுர கலை மன்றம் என்ற பாடசாலையை ஆரம்பித்து இங்கே மாணவர்களுக்கு பயிர்டுவிது வருகிறார் .இவரது புதல்வி சைந்தவி கூட இவரது மாணவி யாக பயின்று 2009இல் நடைபெற்ற இசைக்குயில் என்ற மாபெரும் விருதை வெல்ல காரணமாக இருந்தவர் என்பது குறிபிடத்தக்கது. மேலும் இவரது மாணவர்கள் பலரும் பலவகையான போட்டிகளில் பங்கு பற்றி ஏராளமான விருதுகளையும் சாதனைகளையும் பெற்று வருவது இவருக்கு பெருமை சேர்க்கும் விடயம் அஆகும்